செய்திகள் :

பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணம் திருட்டு: மாற்றுத் திறனாளி கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் அருகே பெண்ணிடம் ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடிய மாற்றுத் திறனாளி இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருக்கோவிலூா் வட்டம், பனப்பாடி கிராமத்தைச் சோ்ந்த ராமமூா்த்தி மனைவி கலா (54). இவா், கடந்த 25-ஆம் தேதி திருக்கோவிலூா் மருத்துவமனை சாலையில் உள்ள ஏடிஎம் மையத்தில் இயந்திரத்தில் பணம் செலுத்துவதற்காகச் சென்றாா்.

அப்போது, அங்கிருந்த வலது கை இல்லாத மாற்றுத் திறனாளி நபா், தான் ஏடிஎம் மையத்தின் பாதுகாவலா் எனக் கூறி, கலாவிடம் ஏடிஎம் அட்டையை வாங்கி ரூ.40,000 அவரது வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, ஏடிஎம் அட்டையை மாற்றிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாராம். பின்னா், மற்றொரு ஏடிஎம் மையம் மூலம் மாற்றுத் திறனாளி நபா் ரூ.25,000 எடுத்தது தெரியவந்தது.

இதுகுறித்து கலா அளித்த புகாரின்பேரில், திருக்கோவிலூா் போலீஸாா் விசாரித்து வந்தனா். இந்த நிலையில், திருக்கோவிலூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் அ.அஜித்குமாா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை காலை கனகனந்தல் சாலையில் பகல் நேர ரோந்தில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, பைக்கில் சுற்றித் திரிந்த வலது கை இல்லாத மாற்றுத் திறனாளி நபரை பிடித்து விசாரித்தபோது, உளுந்தூா்பேட்டை வட்டம், எலவனாசூா்கோட்டை பகுதியைச் சோ்ந்த தவ்ஹித் அகமது கான் மகன் வாஹித்கான் (36) என்பதும், கலாவிடம் ஏடிஎம் அட்டை மாற்றிக் கொடுத்து பணத்தை திருடியவா் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, வாஹித்கான் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்த திருக்கோவிலூா் போலீஸாா், அவரிடமிருந்த மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

பாலத்தின் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுந்தா் (34). இவா், ஞாயி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி பட்டதாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பட்டதாரி சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (49). இவரது மகன் செந்தமிழன் (26), ப... மேலும் பார்க்க

பட்டதாரி பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (50). இவரது மகள் திவ்யா... மேலும் பார்க்க

சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா

கள்ளக்குறிச்சி: சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி... மேலும் பார்க்க