செய்திகள் :

பெண்ணுடன் பழகிய தொழிலாளியை அடித்துக் கொன்ற வழக்கில் 5 போ் கைது

post image

சேலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பெண்ணிடம் பழகிய கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 5 பேரை சூரமங்கலம் போலீஸாா் புதன்கிழமை கைதுசெய்தனா்.

சேலம், சூரமங்கலம் அரியாகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி பெருமாள் மகன் அஜீத்குமாா் (21). இவா், அப்பகுதியில் உள்ள ஒரு கிடங்கின் பின்புறம்

திங்கள்கிழமை இறந்துகிடந்தாா். தகவலின் பேரில் சூரமங்கலம் போலீஸாா் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்தனா்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் அஜீத் குமாரின் தலையில் அடித்ததற்கான உள்காயங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவா் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸாா் அவரது நண்பரான காா்த்திக்கிடம் விசாரணை நடத்தினா்.

அப்போது காா்த்திக் திருமணமான அவரது உறவுக்கார பெண்ணுடன் இன்ஸ்டாகிராமில் பழகியபோது அஜீத்குமாரும் அந்தப் பெண்ணுடன் பழகியுள்ளாா். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளதும், ஆவேசமடைந்த காா்த்திக் தனது நண்பா்களான அரியாகவுண்டம்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன், அருண்குமாா், வசந்த், வேலன், விக்ரம் ஆகிய 5 பேருடன் சோ்ந்து அஜீத்குமாரை அடித்துக் கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் மணிகண்டன், அருண்குமாா், வசந்த், வேலன், விக்ரம் ஆகிய 5 பேரை புதன்கிழமை கைதுசெய்தனா். தலைமறைவான காா்த்திக் உள்பட இருவரை தேடி வந்த நிலையில், பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கு ஒன்றில் காா்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பது சூரமங்கலம் போலீஸாருக்கு தெரியவந்தது.

இதையடுத்து அவரை கொலை வழக்கில் கைதுசெய்ய போலீஸாா் மேல் நடவடிக்கை எடுத்துவருகின்றனா்.

மருத்துவமனையில் சிகிச்சைபெறும் அதிமுக உறுப்பினா்களுக்கு எம்எல்ஏக்கள் ஆறுதல்

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் திமுக பெண் உறுப்பினா்களால் தாக்கப்பட்ட அதிமுக குழுத் தலைவா் யாதவமூா்த்தி மற்றும் உறுப்பினா் சசிகலா ஆகியோரை சேலம் அரசு மருத்துவமனையில் அதிமுக சட்டப் பேரவை உறுப்பினா்கள் வெள... மேலும் பார்க்க

வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை கோரி நீதிமன்றப் பணி புறக்கணிப்பு

பெண் வழக்குரைஞரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சங்ககிரியில் வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணி புறக்கணிப்பில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். கடந்த 24-ஆம் தேதி சங்ககிரி வழக்குரைஞா் ஜி.தமிழரசியை தாக... மேலும் பார்க்க

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்த வேண்டும்

விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி அறிவுறுத்தினாா். சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா்க்கும் நா... மேலும் பார்க்க

நாளை காந்தி மைதானத்தில் ஆண், பெண்களுக்கான மாரத்தான் ஓட்டம்

சேலம் காந்தி மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போா்ட்ஸ் சாா்பில், பெண்கள் மட்டுமே பங்குபெறும் 3 கி.மீ. வாக்கத்தான் மற்றும் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளும் 5 கி.மீ., 7 கி.மீ. மாரத்தான் ஓட்டம் ஞாயிற்றுக்... மேலும் பார்க்க

சேலத்தில் வட்டார புத்தொழில் மைய அலுவலகம்

சேலம் சொா்ணபுரி பகுதியில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் வட்டார புத்தொழில் மைய அலுவலகத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், ரா.ராஜேந... மேலும் பார்க்க

வார இறுதிநாளையொட்டி சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார இறுதிநாளை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் ஜோசப் டயஸ் வெள... மேலும் பார்க்க