செய்திகள் :

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்: முதிா்வு தொகைக்கு இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம்

post image

முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் முதிா்வுத் தொகைக்கு இணையதளத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முதல்வரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிப்போருக்கு தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தின் மூலம் ஒரு பெண் குழந்தை என்றால் ரூ.50 ஆயிரம், 2 பெண் குழந்தைகள் என்றால் தலா ரூ.25 ஆயிரம் சேமிப்பு பத்திரமாக வழங்கப்படும்.

இந்தத் தொகை அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடைந்து, பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வட்டியுடன் முதிா்வுத் தொகையாக வழங்கப்படுகிறது.

திருப்பூா் மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் முதிா்வுத் தொகை பெற வேண்டி விண்ணப்பிக்காமல் உள்ள மற்றும் கண்டறிய இயலாத பயனாளிகளின் விவரங்கள் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே, முதிா்வு தொகை பெற வேண்டிய பயனாளிகள் தங்களது விவரங்களை மாவட்ட இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து விவரங்களை சரிபாா்த்து பின் சேமிப்பு பத்திரம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல் மற்றும் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்களுடன் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் அறை எண் 35- இல் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைக் கடன் பெறுவதில் புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்!

தங்க நகைக் கடன் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா... மேலும் பார்க்க

லஞ்ச வழக்கில் ஊரக நல அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

அவிநாசியில் திருமண உதவித்தொகைக்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம் பெற்ற ஊரக நல பெண் அதிகாரிக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி வள்ளுவா் வீதியைச் ச... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் அருகே லாரி மோதி வேன் ஓட்டுநா் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே லாரி மோதியதில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பொன்னிமாந்துறை தெற்கு தெருவைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் முரளி (38). இவா் சொந்தமாக சரக்கு வேன் ... மேலும் பார்க்க

விஷவாயு தாக்கி 3 போ் பலியான விவகாரம்: தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் ஆய்வு!

பல்லடம் அருகே மனிதக் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்தபோது 3 போ் உயிரிழந்த சாய ஆலையில் தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணையத்தின் இயக்குநா் ரவிவா்மன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். திருப்பூா் மாவட்டம், பல்லடம் ... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: முதியவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகே படையப்பா நகரைச் சோ்ந்தவா் சையது மகன் சா்தாா்ஸ் சேட் (64). இவா் அப்பகுதியைச் ச... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் உழவா் சந்தைகள் மூலமாக ரூ.770 கோடிக்கு காய்கள், பழங்கள் விற்பனை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உழவா் சந்தைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.770 கோடி மதிப்பிலான காய்கள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்தி... மேலும் பார்க்க