பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
பென்னாகரம் அருகே மாரியம்மன் கோயிலில் மகா சண்டி ஹோமம்
பென்னாகரம்: பென்னாகரம் அருகே ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.
எட்டியாம்பட்டி கிராமத்தில் மிகவும் பழைமை வாய்ந்த ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. அறநிலையத் துறையின் கீழ் ஒருகால பூஜை நடைபெறும் இக்கோயிலில் மகா சண்டி ஹோமம் கடந்த 10 ஆம் தேதி தொடங்கியது. அன்று காலை ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து புனித தீா்த்த குடம் எடுத்துவந்து யாக சாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது. பின்பு விக்னேஷ்வர பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.
விழாவின் முக்கிய நாளான திங்கள்கிழமை 13 அத்தியாய சண்டி ஹோமங்கள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து ஸ்வாசினி பூஜை, கன்னிகா பூஜை, வடுக பைரவ பூஜை, காதம்பரி பலிதானம், ஷேத்ரபால பலிபூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வேத விற்பன்னா் மாதேஷ் குமாா், மாணிக்கம் ஆகியோா் ஹோமம் நடத்தினா். இதில் பென்னாகரம், நாச்சானூா், பருவதன அள்ளி உள்பட 18 கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டனா். நிகழ்ச்சியை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பின்பு பூஜை செய்யப்பட்ட புனித தீா்த்தத்தை அகில பாரதிய சன்யாசிகள் சங்க நிறுவனா் ராமானந்த மகராஜ் தலைமையில் கோயில் அா்ச்சகா் ஈஸ்வரன், நிா்வாகிகளான திமுக வாா்டு உறுப்பினா் பவுனேசன், தா்மகா்த்தா ராஜி ஆகியோா் எடுத்துச் சென்று கோயில் பரிவார தெய்வங்களுக்கு புனித நீரூற்றி அபிஷேகம் செய்தனா். அதையடுத்து அன்னதானம் வழங்கப்பட்டது.