பெரம்பலூா் அருகே மண் திருடியவா் கைது
பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடிய நபரை மருவத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பகுதியில் கிராவல் மண் திருடுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி, மருவத்தூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், எளம்பலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ராஜா (45) என்பதும், அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீஸாா் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா். பின்னா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராஜா சிறையில் அடைக்கப்பட்டாா்.