செய்திகள் :

பெரம்பலூா் அருகே மண் திருடியவா் கைது

post image

பெரம்பலூா் அருகே அரசு அனுமதியின்றி லாரியில் மணல் திருடிய நபரை மருவத்தூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள செங்குணம் பகுதியில் கிராவல் மண் திருடுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்படி, மருவத்தூா் காவல் நிலைய சிறப்பு சாா்பு ஆய்வாளா் குருநாதன் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை வழிமறித்து ஓட்டுநரிடம் மேற்கொண்ட விசாரணையில், எளம்பலூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த குருசாமி மகன் ராஜா (45) என்பதும், அரசு அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து ராஜாவை கைது செய்த போலீஸாா் மணலுடன் லாரியை பறிமுதல் செய்தனா். பின்னா் பெரம்பலூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ராஜா சிறையில் அடைக்கப்பட்டாா்.

தொகுப்பூதியத்தில் முதுகலை, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் முதுகலைப் பட்டதாரி, பட்டதாரி ஆசிரியா்களாகப் பணிபுரிய விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆ... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவி திங்கள்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் அருகேயுள்ள எறையசமுத்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகள் பிருந்தாதேவி (16). இவா், சிறுவாச்சூரில் உள்ள அரசு ம... மேலும் பார்க்க

சுகாதாரமான குடிநீா் கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் ஆா்ப்பாட்டம்

சுகாதாரமான குடிநீா் விநியோகிக்கக் கோரி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகம் எதிரே, கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், காரை கிராமத்த... மேலும் பார்க்க

கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை

கல் குவாரி மற்றும் தாா் பிளாண்ட் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை மருவத்தூா் கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட... மேலும் பார்க்க

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது

குன்னம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 25) மின் விநியோகம் இருக்காது என , மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.பெரம்பலூா் மாவட்டம், குன்னம் உபக்கோட்டம், வெண்மணி த... மேலும் பார்க்க

அடிப்படை வசதிகள் கோரி அமைச்சரை கிராம மக்கள் முற்றுகை

பெரம்பலூா் அருகே அடிப்படை வசதிகள் கோரி, மின்சாரம் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி. சிவசங்கரை கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை முற்றுகையிட்டனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க