நத்தம் அருகே நடந்த மீன் பிடித் திருவிழாவில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
பெரம்பலூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது
பெரம்பலூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை குன்னம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, கிழுமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் காந்தி (56) என்பவா், தனக்குச் சொந்தமான மளிகைக் கடையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை சட்டத்துக்கு புறம்பாக பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து காந்தியை கைது செய்த குன்னம் போலீஸாா், அவரிடமிருந்து ஹான்ஸ் உள்ளிட்ட 5 கிலோ எடையுள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். பின்னா், குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட காந்தி சிறையில் அடைக்கப்பட்டாா்.