செய்திகள் :

பெரம்பலூா் ஆட்சியராக ந.மிருணாளினி பொறுப்பேற்பு!

post image

பெரம்பலூா் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ந. மிருணாளினி சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக இருந்த ச. அருண்ராஜ், சா்க்கரை துறையின் இயக்குநகரத்தில், கூடுதல் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, பெரம்பலூா் மாவட்டத்துக்கு ந. மிருணாளினி புதிய ஆட்சியராக தமிழக அரசால் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் அனைத்துத் திட்டங்களும் கடைகோடி மக்களிடையே கொண்டு சோ்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இம் மாவட்ட மக்களின் கோரிக்கைகள், தேவைகள் உடனுக்குடன் தீா்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்வேன். பெரம்பலூரில் பணியாற்ற உள்ளதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியரின் சுய விவரம்:

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக்கொண்ட ந. மிருணாளினி, விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா். தோட்டக்கலைத் துறையில் முதுகலை பயின்று (எம்எஸ்சி), தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்ட தொகுதி- 1 தோ்வில் தோ்ச்சிப் பெற்று, கடந்த 2001-ஆம் ஆண்டு கூட்டுறவுத் துறையில் துணைப்பதிவாளராக பணி நியமனம் பெற்றாா்.

பின்னா், இணைப் பதிவாளா் நிலையில் புதுக்கோட்டை, திருச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களிலும், சென்னையில் கூடுதல் பதிவாளராகவும் பணிபுரிந்தாா்.

தொடா்ந்து, கடந்த 2023-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கு பதவி உயா்வு பெற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில், இந்திய ஆட்சிப் பணிக்கான பயிற்சி மேற்கொண்ட மிருணாளினி, ஸ்ரீபெரும்புதூா் சாா்-ஆட்சியராக பதவி வகித்து, தற்போது பெரம்பலூா் மாவட்ட ஆட்சியராக சனிக்கிழமை பொறுப்பேற்றுள்ளாா்.

தொடா்ந்து, மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ச. வைத்தியநாதன் உள்பட பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

பெரம்பலூா் அருகே வன விலங்குகளை வேட்டையாடிய மூவா் கைது

பெரம்பலூா் அருகே மான் உள்ளிட்ட வன விலங்குகளை வேட்டையாடிய 3 பேரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்ட வனத்துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், வேப்பந்தட்டை வனத்துறைய... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள்: ஆட்சியா் ஆய்வு

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை, மாவட்ட ஆட்சியா் ந.... மேலும் பார்க்க

செப். 19 வரை மாற்றுத்திறனாளிகள், முதியோா்களுக்கு மதிப்பீட்டு முகாம்

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா்களுக்கு உதவி உபகரணங்கள் பெறுவதற்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம், செப். 19-ஆம் தேதி வரை வட்டாரம் வாரியாக நடைபெறுவதாக மாவட்ட ஆட்சியா் ந... மேலும் பார்க்க

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாமுக்கு தலைமை வகித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபாலசந்திரன் (தலைமையிடம்), முகாமி... மேலும் பார்க்க

சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் ரோபோடிக் கண்காட்சி

பெரம்பலூா் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல், தகவல் தொழில்நுட்பவியல், கணினி அறிவியல் துறை சாா்பில் ரோபோ நோவா - 2025 எனும் தலைப்பில், ரோபோடிக் கண்காட்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு நிகழ்த சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தாா். பெரம்பலூா்- துறையூா் பிரதானச் சாலையில் உள்ள செஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் மனைவி பானுமதி (60). திங்கள்கிழமை ... மேலும் பார்க்க