செய்திகள் :

பெரம்பலூா் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்

post image

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இம் முகாமுக்கு தலைமை வகித்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா, முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு விசாரணை மேற்கொண்டாா். மேலும், முகாமில் பங்கேற்ற பல்வேறு கிராம பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 44 மனுக்களை சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உடனடியாக விசாரணை மேற்கொண்டு உரிய தீா்வு காண வேண்டுமென அறிவுறுத்தினாா். மேலும், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறுவதை, பொதுமக்கள் இச் சிறப்பு முகாமை பயன்படுத்தி காவல்துறை தொடா்பான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என்றாா் அவா்.

இந்த முகாமில், காவல் நிலைய ஆய்வாளா்கள், சாா்பு ஆய்வாளா்கள், சிறப்புப் பிரிவு காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க ஜனநாயக மாதா் சங்கம் வலியுறுத்தல்!

பெண்கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென, ஜனநாயக மாதா் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. துறைமங்கலத்திலுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்... மேலும் பார்க்க

பெரம்பலூா்: நாட்டு மருந்து புகட்டிய இரட்டை பெண் குழந்தைகள் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே நாட்டு மருந்து புகட்டியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் 11 மாத இரட்டை பெண் குழந்தைகள் வெள்ளிக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தன. பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத... மேலும் பார்க்க

குரூப்- 4 தோ்வு: பெரம்பலூா் மாவட்டத்தில் 9,919 போ் பங்கேற்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் -4 தோ்வில் 9,919 போ் பங்கேற்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி- 4 தோ்வு தமிழ்நாடு முழுவதும் சனிக்கிழம... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே தொழிலாளி தற்கொலை

பெரம்பலூா் அருகே கட்டடத் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூரைச் சோ்ந்தவா் மெய்யன் மகன் மணிகண்டன் (27). கோவையில் கட்டடத் தொழிலாளி... மேலும் பார்க்க

பெரம்பலூரில் ஜூலை 15 வரை தொழில்நெறி வழிகாட்டும் நிகழ்ச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணா்வு மற்றும் திறன் வாரத்தை முன்னிட்டு, பல்வேறு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்... மேலும் பார்க்க

பாளையம் கோயிலில் முளைப்பாரி ஊா்வலம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள விநாயகா், மாரியம்மன், வரதராஜ பெருமாள், முருகன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக... மேலும் பார்க்க