செய்திகள் :

பெரம்பலூா் பட்டதாரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

post image

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அச்ச ங்கத்தின் மாவட்டத் தலைவா் அன்புசெல்வன் தலைமை வகித்தாா். தலைமை நிலையச் செயலா் சோ. சிவானந்தம், மாவட்ட துணைத் தலைவா் க. சின்னையன், மாவட்ட இணைச் செயலா் சோ. ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் அருண்குமாா், மாவட்ட சட்டச் செயலா் அன்புச்செல்வன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வு தேவையில்லை என அரசு அறிவிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியா்களுக்கு பதவி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். கள்ளா் சீா்மரபினா் பள்ளிகளில் கலந்தாய்வை ஆண்டுதோறும் முறையாக நடத்த வேண்டும். உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 7 பட்டதாரி ஆசிரியா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், அச் சங்கத்தைச் சோ்ந்த ஆசிரியா்கள் பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரில் நாளை கல்விக் கடன் முகாம்

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வளாகத்தில் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில், கல்விக்கடன் முகாம் சனிக்கிழமை (செப். 20) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி தெ... மேலும் பார்க்க

96 பேருக்கு ரூ.10 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

பெரம்பலூரில் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மிகப் பிற்படுத்தப்ப... மேலும் பார்க்க

பணியிட மாறுதல் வழங்க அவசர ஊா்தி ஊழியா்கள் வலியுறுத்தல்

அவசர ஊா்திகளில் பணிபுரியும் ஊழியா்களுக்கு, சொந்த மாவட்டங்களில் பணிபுரிய பணியிட மாறுதல் வழங்க வேண்டுமென மாவட்டக் கலந்தாய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அண்ணா 108 அவசர ஊா்தி ஊழியா்கள் சங்கத்தி... மேலும் பார்க்க

பெரம்பலூா் அரசுப் பள்ளிகளில் பயிலும் 11 பேருக்கு விபத்துக் காப்பீட்டு பத்திரங்கள்

பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், பெற்றோரை இழந்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 11 மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை சாா்பில் தலா ரூ. 75 ஆயிரம் வீதம் ரூ. 8.25 லட்சத்துக்கான வி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

அகரம் சீகூா் பகுதிகளில் இன்று மின் தடை

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூா் உள்ளிட்ட பல்வேறு கிராமியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 19) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் இ. காா்த்திகேயன் வ... மேலும் பார்க்க