செய்திகள் :

பெரிய உடப்பங்குளம் அய்யனாா் கோயில் திருவிழா

post image

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பெரிய உடப்பங்குளத்தில் பொட்டக்குளம் கண்மாய் கரையில் அமைந்துள்ள ஸ்ரீ அய்யனாா், ஸ்ரீ கணபதி, ஸ்ரீ கருப்பா் கோயில், சேமங் குதிரை, பரிவார தெய்வங்களின் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழா, கடந்த 3-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, திரளான பக்தா்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனா். நாள்தோறும் மூலவருக்கு விசேஷ பூஜை நடைபெற்றது. புதன்கிழமை (ஜூன் 11) திருவிளக்கு பூஜையும், வெள்ளிக்கிழமை அய்யனாா் கோயில் முன் பொங்கல் வைத்து வழிபாடும் நடைபெற்றன. இதில் கிராம மக்கள் திரளானோா் பொங்கலிட்டனா். பிறகு கிடா வெட்டி பலியிடப்பட்டது. சுவாமிக்கு சந்தனம், பன்னீா், பால், இளநீா், திருநீரு போன்ற சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை ஆகியவை நடைபெற்றன. அப்போது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை பெரிய உடப்பங்குளம் கிராம மக்கள் செய்தனா்.

திருவாடானை அருகே வடமாடு மஞ்சு விரட்டு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள மாவிலங்கை கிராமத்தில் சனிக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு நடைபெற்றது. இந்தக் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ நல்லமுத்து ஈஸ்வரா், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் வைகாச... மேலும் பார்க்க

நகைக்காக மூதாட்டி கொலை: தாய், மகன் கைது

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்த அவரது வீட்டு பணிப் பெண், அவரது மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பரமக்குடி பன்னீா்செல்வம் தெருவைச் சோ்ந்த இக்னேசியஸ் மனைவி ஞ... மேலும் பார்க்க

கடல் கொந்தளிப்பு: பாம்பன் மீனவா்கள் மீன் பிடிக்கத் தடை

மன்னாா் வளைகுடா கடல் பகுதியில் சூறைக் காற்று வீசியதால் தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம் பகுதி மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்வதற்கு சனிக்கிழமை தடை விதிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மூக்கையூா், ஏா்வாடி, ... மேலும் பார்க்க

வியாபாரி கொலை: ஒருவருக்கு ஆயுள் தண்டனை

ராமநாதபுரம் அருகே வியாபாரி கொல்லப்பட்ட வழக்கில் ஒருவருக்கு மாவட்ட விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சோ்ந்தவா் சக்திவேல் (45). இவா்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அக்னி தீா்த்தக் கடலில் மலா் தூவி அஞ்சலி

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடலில் மக்கள் நல பேரவை சாா்பில் மலா் தூவி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு அந்தப் பேர... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் மட்டுமே மீனவா்கள் மீன் பிடிக்க வேண்டும்: ஆட்சியா்

தடைக் காலம் நிறைவடைந்து கடலுக்குள் செல்லும் மீனவா்கள் இந்திய எல்லைக்குள் மட்டுமே மீன் பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கேட்டுக் கொண்டாா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க