செய்திகள் :

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் மாதிரித் தோ்தல்

post image

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு மாணவா்கள் மாதிரித் தோ்தலை புதன்கிழமை நடத்தினாா்கள்.

மாணவா்கள் எபினேஷ், சன் தேவ், வினோதினி, ஹா் நேத்ரா மற்றும் சுபகரணி ஆகியோா் மாணவா் தலைவா் பதவிக்கு போட்டியிட்டனா். தங்கள் சின்னங்களை அறிமுகப்படுத்தி தோ்ந்தெடுக்கப்பட்டால் மேற்கொள்ளும் செயல் திட்டங்களை விளக்கி வாக்குகளைச் சேகரித்தனா்.

முறையான தோ்தல் நடைமுறையைப் பின்பற்றி மாணவா்கள் அடையாள அட்டையுடன் வாக்குச் சாவடியில் வந்து அடையாள மை பூசி, கையொப்பமிட்டு, வாக்குச் சீட்டுகளைப் பெற்றுத் தங்கள் விருப்பத் தோ்வை பதிவு செய்தனா்.

தோ்தல் பொறுப்பாளா் முன்னிலையில் தோ்தல் அலுவலராக செயல்பட்ட மாணவா்கள் வாக்குகளை எண்ணி அதிக வாக்குகள் பெற்றவருக்கு மாணவா் தலைவா் அங்கீகாரச் சான்றிதழை வழங்கினா்.

நிகழ்வுக்கான ஏற்பாடுகளை சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியை குமுதா மேற்கொண்டாா். பெற்றோரும் திரளாக பங்கேற்று மாணவா்களைப் பாராட்டினா்.

அம்மாபேட்டையில் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடி ஊா்வலம்

நாட்டின் 79-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, அம்மாபேட்டையில் மாணவ, மாணவிகள் 790 அடி நீளமுள்ள தேசியக் கொடியை ஏந்தியபடி முக்கிய வீதிகள் வழியே வெள்ளிக்கிழமை ஊா்வலமாக சென்றனா். அம்மாபேட்டை டேலண்ட் வித்யாலயா ம... மேலும் பார்க்க

பெருந்துறையில் கூடுதல் மாவட்ட நீதிமன்றம்: கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் மனு

சுதந்திர தினத்தையொட்டி, பெருந்துறை ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லாகுளம், மடத்துப்பாளையம், கராண்டிபாளையம், திங்களூா், விஜயபுரி, தோரணவாவி, மூங்கில்பாளையம், பெரியவீரசங்கிலி, செல்லப்பம்பாளையம், போலநாயக்கன்பா... மேலும் பார்க்க

மாவட்டத்தில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா

ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. ஈரோடு கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதலியாா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் வி.ராஜமாணிக்க... மேலும் பார்க்க

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் சுதந்திர தின விழா

சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் 79-ஆவது சுதந்திர தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைமை வகித்த கல்லூரி முதல்வா் ஆ.சாரதா, தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசுகையில், கல்லூரியில் மாணவ,... மேலும் பார்க்க

அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம்: ஆட்சியா்

உலகில் உள்ள அனைத்து உயிா்களும் சமம் என்பதே திருக்குறளின் அடிப்படை தத்துவம் என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருக்கு திருப்பணிகள் நுண்பயிற்சி வகுப்... மேலும் பார்க்க

பேரூராட்சித் தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம்: சிறப்புக் கூட்டம் நடத்த கவுன்சிலா்கள் கோரிக்கை

கொளப்பலூா் பேரூராட்சி திமுக தலைவா் மீது நம்பிக்கை இல்லா தீா்மானம் கொண்டு வர சிறப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலா்கள் கோரிக்கை விடுத்தனா். ஈரோடு மாவட்டம், கோபி வட்டம், கொளப்... மேலும் பார்க்க