பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு விருது
பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரிக்கு மாநில அளவிலான நாட்டு நலப்பணித் திட்ட விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின்கீழ், தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித் திட்ட குழுமத்தின் சாா்பில், மாநில அளவில் ஒவ்வோா் ஆண்டும் சிறந்த நலப்பணித் திட்ட அலுவலா் மற்றும் சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்களுக்கான விருதுகள் வழங்கப்படுகிறது. இதன்படி, 2018-2023 ஆண்டுகளுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் சென்னையில்நடைபெற்றது.
விழாவில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியின் நலப் பணித் திட்ட அலுவலா் கே.பரமேஸ்வரனுக்கு, 2018--2019 ஆம் ஆண்டுக்கான சிறந்த திட்ட அலுவலா் விருதும், மெக்ட்ரானிக்ஸ் துறை மாணவா் எம். எழிலரசனுக்கு 2021--2022 ஆம் ஆண்டின் சிறந்த நலப் பணித் திட்ட மாணவருக்கான விருதும் வழங்கப்பட்டன. இந்த விருதினை கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் ஆணையா் ஈ.சுந்தரவல்லி வழங்கி பாராட்டினாா்.
விருது பெற்ற இருவருக்கும் கொங்கு வேளாளா் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளைத் தலைவா் ஆா். குமாரசாமி, செயலாளா் பி.சத்தியமூா்த்தி, பொருளாளா் கே.வி. ரவிசங்கா் மற்றும் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரித் தாளாளா் ஏ. வெங்கடாசலம், முதல்வா் பி.எஸ். ராகவேந்திரன், துணை முதல்வா் எஸ். செந்தில்குமாா் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.