செய்திகள் :

பெற்றோரை பராமரிக்காத மகன்; கோபத்தில் கொலைசெய்த தந்தை - மணப்பாறை அருகே அதிர்ச்சி சம்பவம்!

post image

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கபட்டியைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது: 78). இவரது மகன் அண்ணாதுரை (வயது: 55). கந்தசாமி தனது மனைவி பொன்னம்மாளுடன் வசித்து வரும் நிலையில், அதன் அருகில் அண்ணாதுரை வசித்து வருகிறார். இந்நிலையில், தனது தாய் மற்றும் தந்தையை அண்ணாதுரை முறையாக பராமரிக்காமல் இருந்ததுடன், உணவுகூட வழங்கப்படவில்லை என்று கூறப்படுகின்றது.

annadurai

இதனால், ஆத்திரம் அடைந்த கந்தசாமி நேற்று இரவு அண்ணாதுரை வீட்டிற்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். இதில், அண்ணாதுரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல் உடற்கூராய்வு மேற்கொள்வதற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கந்தசாமியை மணப்பாறை காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர். இந்த கொலை சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி சான்றிதழ்களுடன் பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிய முயன்ற இருவர் கைது.. நடந்தது என்ன?

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச்சேர்ந்த கவிதா, சேலம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் டெல்லி பார் கவுன்சிலில் 2020 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதிவு செய்துள்ளனர். இவர்கள் தங்கள் பதிவை தமிழ்நாட... மேலும் பார்க்க

கரூர்: இளம்பெண் மரணம்; போராடிய உறவினர்களைத் தகாத வார்த்தையால் திட்டிய ஆய்வாளர்! - பரவும் வீடியோ

கரூர் அடுத்த வெண்ணைமலையைச் சேர்ந்தவர் முருகராஜ். இவருக்கும், திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியைச் சேர்ந்த காவியா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடைபெ... மேலும் பார்க்க

பாமக வக்கீல் சுட்டுக் கொலை... குற்றவாளிகளைச் சுட்டுப்பிடித்த போலீஸ் - என்ன நடக்கிறது சோளிங்கரில்?

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் சக்கரவர்த்தி (வயது 48). இவர், பா.ம.க இளைஞரணியில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 11-ம் தேதி நள்ள... மேலும் பார்க்க

வீடு, கடைகளுக்கு ரசாயனம் கலந்த பால்; தென்காசியில் 2 ஆண்டுகள் விற்றது அம்பலம்.. பகீர் பின்னணி

தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரத்தில் அன்னை முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 70-க்கும் மேற்பட்ட முதியவர்கள் சாப்பிட்ட கெட்டுப்போன அசைவ உணவால் ஒவ்வாமை ஏற்பட்டதில் நான்கு பேர் பலியான நிலையில், தென்க... மேலும் பார்க்க

``உடல், மன ரீதியான பிரச்னை..'' - கிரானைட் முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்க துரை தயாநிதி மனு

அரசுக்கு ரூ.259 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் ஒலிம்பஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்க துரை தயாநிதி தரப்பில் மனு... மேலும் பார்க்க

பீகார்: பாஜக கொடியுடன் வந்த SUV கார்; காவலர்கள் மீது மோதியதில் பெண் காவலர் பலி; ஒட்டுநர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவின் ஸ்ரீகிருஷ்ணா பூரி பகுதிக்கு அருகே, அடல் பாத் பகுதியில் வாகனப் பரிசோதனையிலிருந்த காவல்கள் மீது கார் மோதியது.வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மூன்று காவலர்களும் உடனடியாக அருகி... மேலும் பார்க்க