4 சுங்கச்சாவடிகள் நிலுவைத் தொகையை செலுத்த முடிவு! உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு ...
பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்
ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.
ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவுடன் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த புதின் இது குறித்து கூறியதாவது:
ஆரெஷ்னிக் ஏவுகணைகள் ராணுவப் பணியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த ஏவுகணைகளை பெலாரஸிலும் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.
அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கிய ஏவுகணைகளை ரஷியா மீது வீச அந்த நாடுகள் உக்ரைனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அனுமதி அளித்தன. அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைனின் நீப்ரோ நகரில் ஆரெஷ்னிக் ஏவுகணையை ரஷியா கடந்த மாதம் வீசியது.
கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அது புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை எனவும், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு ஒலியைப் போல் 10 மடங்குக்கும் மேலான வேகத்தில் அது பாயும் என்றும் அதிபா் புதின் பின்னா் அறிவித்தாா்.
மேலும், இடைமறித்து அழிக்க முடியாத அந்த ஏவுகணைகள் உக்ரைன் போரின் போக்கையும், ரஷியாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான சமநிலையையும் மாற்றும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அந்த வகை ஏவுகணைகள் மிக சொற்மாகவே தயாரிக்கப்பட்டுள்ளதால் அது போரில் அவை போரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தாது என்று மேற்கத்திய பாதுகாப்பு நிபுணா்கள் கூறியிருந்தனா்.
இந்த நிலையில், ஆரெஷ்னிக் ஏவுகணை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, ராணுவப் பணியில் சோ்க்கப்பட்டுள்ளதாக புதின் தற்போது அறிவித்துள்ளாா்.