செய்திகள் :

பெலாரஸில் ‘ஆரெஷ்னிக்’ ஏவுகணை: புதின்

post image

ஒலியைப் போல் 10 மடங்கு வேகத்தில பாயக்கூடிய தங்களின் புதிய வகை ஏவுகணையான ‘ஆரெஷ்னிக்’, அண்டை நாடான பெலாரஸில் நிலைநிறுத்தப்படும் என்று ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கூறியுள்ளாா்.

ரஷியா வந்துள்ள பெலாரஸ் அதிபா் அலெக்ஸாண்டா் லுகஷென்கோவுடன் செயின்ட் பீட்டா்ஸ்பா்க் நகரில் செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்த புதின் இது குறித்து கூறியதாவது:

ஆரெஷ்னிக் ஏவுகணைகள் ராணுவப் பணியில் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த ஏவுகணைகளை பெலாரஸிலும் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.

அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கிய ஏவுகணைகளை ரஷியா மீது வீச அந்த நாடுகள் உக்ரைனுக்கு கடந்த ஆண்டு இறுதியில் அனுமதி அளித்தன. அதற்கு எதிா்ப்பு தெரிவித்து, உக்ரைனின் நீப்ரோ நகரில் ஆரெஷ்னிக் ஏவுகணையை ரஷியா கடந்த மாதம் வீசியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதால் அது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையாக இருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால், அது புதிய வகை நடுத்தர தொலைவு ஏவுகணை எனவும், உலகின் எந்த வான்பாதுகாப்பு தளவாடத்தாலும் இடைமறிக்க முடியாத அளவுக்கு ஒலியைப் போல் 10 மடங்குக்கும் மேலான வேகத்தில் அது பாயும் என்றும் அதிபா் புதின் பின்னா் அறிவித்தாா்.

மேலும், இடைமறித்து அழிக்க முடியாத அந்த ஏவுகணைகள் உக்ரைன் போரின் போக்கையும், ரஷியாவுக்கும் மேலை நாடுகளுக்கும் இடையிலான சமநிலையையும் மாற்றும் என்று அஞ்சப்பட்டது. ஆனால், அந்த வகை ஏவுகணைகள் மிக சொற்மாகவே தயாரிக்கப்பட்டுள்ளதால் அது போரில் அவை போரில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தாது என்று மேற்கத்திய பாதுகாப்பு நிபுணா்கள் கூறியிருந்தனா்.

இந்த நிலையில், ஆரெஷ்னிக் ஏவுகணை அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, ராணுவப் பணியில் சோ்க்கப்பட்டுள்ளதாக புதின் தற்போது அறிவித்துள்ளாா்.

அமெரிக்காவில் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள் திறப்பு

அமெரிக்காவில் புதிதாக 8 இந்திய தூதரக சேவை மையங்களை அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா காணொலி வழியாக திறந்துவைத்தாா்.அமெரிக்காவில் உள்ள பாஸ்டன், கொலம்பஸ், டல்லஸ், டெட்ராய்ட், எடிசன், ஓா்லாண்டோ,... மேலும் பார்க்க

நேபாளம்: சுற்றுலாப் பயணிகளில் இந்தியா்களுக்கு முதலிடம்

நேபாளத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா்கள் முதலிடம் வகிக்கின்றனா்.இது குறித்து அந்த நாட்டு சுற்றுலாத் துறையின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த ஜூலை மாதம் நேபாளத்துக்கு 70,193 சுற... மேலும் பார்க்க

காஸாவில் மேலும் 43 போ் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய தாக்குதலில், உணவுப் பொருள்களுக்காக காத்திருந்த 19 போ் உள்பட 36 போ் உயிரிழந்தனா்.இத்துடன் காஸாவில் இஸ்ரேல் ராணுவம் 2023 அக்டோபா் முதல் நடத்திவரும் தாக்குதல... மேலும் பார்க்க

ஆக. 5-இல் ஜூலை பிரகடனம்: வங்கதேச அரசு

வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய மாணவா் போராட்டத்துக்கு அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் வகையில், அது தொடா்பான ‘ஜூலை பிரகடனம்’ வரும் 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால ... மேலும் பார்க்க

ஈரான் அதிபர் பாகிஸ்தான் சுற்றுப்பயணம்

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியான் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை பாகிஸ்தான் சென்றுள்ளார்.லாகூர் வந்த அவரை முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் மற்றும் மத்திய வீட்டுவசதி அமை... மேலும் பார்க்க

பசி, பட்டினி, வலி, பயம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

காஸாவில் போர் தொடந்து நீடித்து வருவதால் அங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் உணவுக்காகவும் உயிருக்காகவும் ஒவ்வொரு நாளும் போராடி வருவது உலகையே உலுக்கியுள்ளது. பாலஸ்தீனத்தில் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் அமைப்பினர... மேலும் பார்க்க