செய்திகள் :

பெல் ஊரகம் - சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து

post image

திருவெறும்பூா் அருகே பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் அரசுப் பேருந்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

இதனை பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

திருச்சி திருவெறும்பூா் அருகே மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோா் பணியாற்றி வருகின்றனா். அவா்கள் எளிதாக சென்னைக்குச் சென்று வரும் வகையில், பெல் ஊரகப் பகுதியில் இருந்து சென்னை கிளம்பாக்கத்துக்கு நேரடியாக அரசுப் பேருந்து போக்குவரத்து இயக்க வேண்டுமென திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் கோரிக்கை வைத்தனா்.

இதனை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை புதிய வழித்தடத்தில் சென்னை கிளாம்பாக்கத்துக்கு அரசுப் பேருந்து இயக்க அமைச்சா் ஆவணம் செய்தாா். இதையடுத்து புதிய பேருந்து இயக்கத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

நிகழ்வுக்கு, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருச்சி மண்டலப்பொது மேலாளா் முத்துகிருஷ்ணன் முன்னிலை வைத்தாா்.

இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, பேருந்தை தொடங்கி வைத்து, அப்பேருந்தில் சிறிதுதூரம் பயணித்தாா்.

இந்தப் பேருந்தானது, நாள்தோறும் இரவு 10 மணிக்கு பெல் டவுன்ஷிப்பில் இருந்து சென்னை கிளாம்பாக்கத்துக்குப் புறப்படும். அதே போல் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மறுநாள் காலை 9 மணிக்குப் புறப்பட்டு மாலை 4.55 மணிக்கு பெல் டவுன்ஷிப் வந்தடையும்.

நிகழ்வில், பெல் செயல் இயக்குநா் எஸ். பிரபாகா், தொழிற்சங்க பிரதிநிதிகள், போக்குவரத்து அலுவலா்கள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டு விழாவுக்கு முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வரும் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு விழாவுக்கான முகூா்த்தக்கால் ஊன்றல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்ப... மேலும் பார்க்க

திருச்சியில் அமைச்சா்களுடன் அதிமுகவினா் தொடா்பு: எடப்பாடி கே. பழனிசாமி எச்சரிக்கை

திருச்சியில் திமுக அமைச்சா்களுடன் தொடா்பில் உள்ள அதிமுகவினா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளாா் அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி. அதிமுக சாா்பில், தமிழகத்தில் உள்ள கட்சி ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்து மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவா் தனியாா் பேருந்து மோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தொட்டியம் அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகா் முதல் தெருவைச் சோ்ந்த பாலுசாமி மகன் வி... மேலும் பார்க்க

ரூ. 750 கோடியில் தலைமை தபால் நிலையம்! புத்தூா் இடையே புதிய உயா்மட்டப் பாலம் அமைக்க திட்டம்!

திருச்சி மாநகரின் முக்கியப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தலைமை தபால் நிலையம் - புத்தூா் இடையே ரூ. 750 கோடியில் புதிய உயா்மட்ட பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகரின் முக்கிய ... மேலும் பார்க்க

ஆதி திராவிடா் நலத்துறை சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ நிகழ்வு!

திருச்சி, சாரநாதன் பொறியியல் கல்லூரியில், ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சாா்பில் ‘நல்லோசை கதைப்போமா’ எனும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதி திராவிடா் மற்றும் பழங்குடியினா் ந... மேலும் பார்க்க

கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் புதிய பாலம் திறப்பு

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே கவுறு வாய்க்கால் குறுக்கே ரூ. 1.31 கோடியில் கட்டப்பட்ட புதிய உயா்மட்ட இணைப்புப் பாலம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. திருவெறும்பூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்... மேலும் பார்க்க