செய்திகள் :

பொறியியல் கலந்தாய்வு: 91,414 பேர் விண்ணப்பம்!

post image

பொறியியல் கலந்தாய்வுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி வரை 91 ஆயிரத்து 414 பேர் க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் புதன்கிழமை (மே 7) தொடக்கி வைத்தார்.

பொறியியல் படிப்புடன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கையும் தொடங்கியது. இதற்காக தனித்தனியாக வலைதளப் பக்கங்களும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் மொத்தம் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. இதில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

எதிரிகளை எங்கு அடித்தால் வலிக்குமோ அங்கு அடித்தோம்: ஏர் மார்ஷல் ஏ.கே. பாரதி

இதனிடையே, பொறியியல் கலந்தாய்வுக்காக முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்காக ஐந்தாவது நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி நிலவரப்படி 91 ஆயிரத்து 414 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும், 39 ஆயிரத்து 633 பேர் கட்டணம் செலுத்தியும், 17 ஆயிரத்து 255 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர் தகவல் வெளியாகியுள்ளது.

பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள்: 6.6.2025

அசல் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி நாள்: 9.6.2025

ரேண்டம் எண் வெளியிடும் நாள்: 11.6.2025

சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் நாட்கள்: 10.6.2025 முதல் 20.6.2025 வரை

தரவரிசை பட்டியல் வெளியிடும் நாள்: 27.6.2025

தரவரிசை பட்டியலில் பிழை இருந்தால் சேவை மையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நாள்கள்: 28.6.2025 முதல் 2.7.2025 வரை

கலந்தாய்வு தொடங்கும் நாள் குறித்து ஏஐசிடிஇ நாள்காட்டியின்படி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்காக விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.5.2025

மேடையிலேயே திடீரென மயங்கி விழுந்த நடிகர் விஷால்

கூவாகம் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் விஷால் மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள் சாா்பில், கூவாகம் த... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

மேட்டூா்: மேட்டூா் அனல் மின் நிலையத்தில் டீசல் குழாயில் உடைந்ததால் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூா் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிர... மேலும் பார்க்க

சேலத்தில் தம்பதி வெட்டிக் கொலை: போலீஸார் விசாரணை

சூரமங்கலம்: சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிா் அம்மாபாளையம் பகுதியில் மளிகைக் கடை நடத்திவந்த வயதான தம்பதி ஞாயிற்றுக்கிழமை பகலில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தாக்கினால் வலுவான பதிலடி கொடுக்கப்படும்: பிரதமர் மோடி

புதுதில்லி: பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் ஈடுபட்டால், வலுவான பதிலடி கொடுக்கப்படும் என ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி.வான்ஸிடம் தொலைபேசியில் பேசியபோது பிரதமர் ம... மேலும் பார்க்க

டிஜிட்டல் மோசடி: 8 மாநிலங்களில் 42 இடங்களில் சிபிஐ சோதனை

இணைய (சைபா்) குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிம் கார்டு மோசடி வழக்குகளில் தொடா்புடையவா்களுக்குச் சொந்தமான 8 மாநிலங்களில் 42 இடங்களில் ‘ஆபரேஷன் சக்ரா 5’ என்ற பெயரில் சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி

India Emerging as Global Tech Leader, Says PM Modiபுதுதில்லி: உலகளாவிய தொழில்நுட்ப முன்னணி மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தேசிய தொழில்நுட்ப நாள் ஒவ்வொரு ஆண்டும் மே ... மேலும் பார்க்க