செய்திகள் :

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

post image

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார்.

கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்குவாதத்தில் ரீபன் தாக்கியதில் ரம்யா கிருஷ்ணன் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

கலெக்டர் அலுவலகத்தில்.ஒட்டப்பட்ட புகார்

தன் பேத்தியின் உயிரிழப்புக்குக் காரணம் அவரின் கணவர்தான் என்று செல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மாயழகன்.

ஆனால், தற்போது வரை எந்தவொரு நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை எனக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள சுவரில் புகார் மனுவை மாயழகன் ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனுவில், "பேத்தி ரம்யா கிருஷ்ணனை அவரது கணவர் ரீபன் அடித்து கொலை செய்து விட்டார். செல்லூர் காவல் நிலையத்தில் தன் கணவர் குறித்து ரம்யா கிருஷ்ணன் பலமுறை புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால்தான் ரம்யா கிருஷ்ணனை அவரது கணவர் அடித்து கொலை செய்துள்ளதாகத் தெரிகிறது.

எனவே என் பேத்தியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ஒட்டப்பட்ட புகாரில் கூறியுள்ளார்.

ரம்யா கிருஷ்ணன்

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயழகன், "என் பேத்தி ரம்யா கிருஷ்ணனிடம், அவள் தயார் கொடுத்து வைத்த வீட்டுமனை பத்திரம் இருந்து வந்தது.

அதைக் கேட்டு அவள் கணவர் அடித்துக் காயப்படுத்தியதில் மருத்துவமனையில் இறந்து விட்டார். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வளவு நாட்களாகியும் பிரேதப் பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை. இரண்டு மாதமாகியும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க