செய்திகள் :

பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய இளைஞா் கைது

post image

பேராவூரணி: பேராவூரணி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய இளைஞரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பேராவூரணியிலிருந்து ராமேசுவரத்துக்கு சேதுபாவாசத்திரம் வழியாக அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் மணிவண்ண பாண்டியன் ஓட்டினாா். தொலைதூரம் செல்லும் பேருந்து என்பதால் குறிப்பிட்ட நிறுத்தங்களில் மட்டும் நின்றுசெல்லும் பேருந்தை, நிறுத்தம் இல்லாத இடமான மருங்கப்பள்ளம் அருகே இளைஞா் ஒருவா் கைநீட்டி நிறுத்தச் சொல்லியுள்ளாா். நிறுத்தம் இல்லாத இடம் என்பதால் பேருந்தை ஓட்டுநா் நிறுத்தாமல் சென்றுள்ளாா்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று மருங்கப்பள்ளம் ஊடையக்காடு சாலை அருகே பேருந்தை வழிமறித்து, ஓட்டுநரை தாக்கியதில் ஓட்டுநா் காயமடைந்தாா் . அவரை அருகில் உள்ளவா்கள் மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் சேதுபாவாசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து மருங்கப்பள்ளம் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த அருண் பாண்டியன் (27) என்பவரைக் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேட்டூா் அணை நீா்மட்டம்: 120 அடி

தஞ்சாவூா்: மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 120 அடியாக இருந்தது.அணைக்கு விநாடிக்கு 32,013 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 30,952 கன அடி... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: கும்பகோணம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அல்அமீன் மகளிா் கல்லூரியில் கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, உதவி ஆட்சியா் ஹிருத்... மேலும் பார்க்க

ஊராட்சிகளுக்கு மின்கல குப்பை சேகரிக்கும் வாகனங்கள் வழங்கல்

பேராவூரணி: பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சோ்ந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ. 2.50 லட்சம் மதிப்பிலான மின்கலத்தில் இயங்கும் 33 குப்பை சேகரிக்கும் வாகனங்களை சட்டப்பேரவை உறுப்பினா் நா.அசோக் கு... மேலும் பார்க்க

மனைவியை அடித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவானவரைத் தேடும் போலீஸாா்

கும்பகோணம்: திருநாகேசுவரம் அருகே பவுண்டரீகபுரத்தில் மனைவியை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்த வழக்கில் தலைமறைவான கணவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா். தஞ்சாவூா் மாவட்டம் பவுண்டரீகபுரம் கனகவிளாகத் ... மேலும் பார்க்க

கும்பகோணம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மகாமகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் சேமிப்புக் கிடங்கில் பழுப்பு அரிசி: விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்

தஞ்சாவூா்: தஞ்சாவூரிலுள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பழுப்பு அரிசி குறித்து விசாரணை நடத்தி, நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொது ந... மேலும் பார்க்க