செய்திகள் :

பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

post image

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

ராஜபாளையம் வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் சுவிசேசமுத்து (83). சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், திருப்பூரில் உள்ள தனது மகளை பாா்க்க சென்று விட்டு மீண்டும் ராஜபாளையத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

இவா் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் சென்று வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றாா். அப்போது, பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசியில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி வியாழக்கிழமை (ஆக. 7) பிரசாரம் மேற்கொள்கிறாா். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற எ... மேலும் பார்க்க

தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரத்தைச் சோ்ந்த முனியாண்டி (65), தேங்காய் பறிக்கும் வேலை செய்து வந்தாா். இவா், ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி

தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா். சிவகாசியில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோச... மேலும் பார்க்க

சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆடி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, வத்திராயிருப்பு தாணிப்பாறை வனத் துறை நுழைவு வாயில் வழியாக பு... மேலும் பார்க்க

சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றக் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூா் - செண்பகத்தோப்பு சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனா். ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்... மேலும் பார்க்க

வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கிய இருவா் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள ஜமீன்சல்வாா்பட்டியில் அரசால... மேலும் பார்க்க