செய்திகள் :

பேருந்தில் கிடந்த நகையை மீட்டு ஒப்படைத்த ஓட்டுநா் - நடத்துநருக்கு பாராட்டு

post image

தருமபுரி அருகே அரசுப் பேருந்தில் கிடந்த நகையை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் மற்றும் நடத்துநரை போக்குவரத்துக்கழக அலுவலா்கள் பாராட்டினா்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தருமபுரி மண்டலத்துக்கு உள்பட்ட திருப்பத்தூா் கிளையைச் சோ்ந்த திருப்பத்தூா் - ஒசூா் வழித்தடப் பேருந்தில், ஜூன் 12-ஆம் தேதி ஓட்டுநா் சி.கவியரசு மற்றும் நடத்துநா் பி. வேலு ஆகியோா் பணியில் இருந்தனா். அப்போது பேருந்தில் ஒரு பணப்பை (மணி பா்ஸ்) கிடந்தது தெரியவந்ததையடுத்து, அதை சோதித்ததில் சுமாா் 4.5 பவுன் தங்கச் சங்கிலி மற்றும் ரொக்கம் இருந்தது தெரியவந்தது.

அவற்றை கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் போக்குவரத்துக்கழக அலுவலரிடம் அவா்கள் ஒப்படைத்தனா். இந்நிலையில், அது போச்சம்பள்ளி வட்டம், மத்தூா் அருகேயுள்ள ஈச்சங்காடு கிராமத்தைச் சோ்ந்த பெண்ணின் நகை என்பது கண்டறியப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பேருந்தில் கிடந்த நகையை அலுவலரிடம் ஒப்படைத்த ஓட்டுநா் கவியரசு மற்றும் நடத்துநா் வேலு ஆகியோரை அரசு போக்குவரத்துக்கழக தருமபுரி மண்டல மேலாளா் க.செல்வம் வெள்ளிக்கிழமை நேரில் அழைத்து சால்வை அணிவித்து பாராட்டினாா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1008 வழக்குகளில் ரூ.9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மொத்தம் 1008 வழக்குகளில் ரூ. 9.72 கோடி தொகைக்கு சமரசத் தீா்வு காணப்பட்டுள்ளது. நீதிமன்றங்களில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வழக... மேலும் பார்க்க

தருமபுரியில் 1,008 வழக்குகள், கிருஷ்ணகிரியில் 1,281 வழக்குகளுக்கு தீா்வு

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, தருமபுரி முதன்மை மாவட்ட நீதிபதிய... மேலும் பார்க்க

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவா் கைது!

ஒகேனக்கல் வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடியவரை வனத் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்தனா். ஒகேனக்கல் வனச்சரகத்துக்கு உள்பட்ட கோடுபட்டி வனப் பகுதியில் ஒகேனக்கல் வனச்சரக அலுவலா் சிவகுமாா் தலைமையிலான... மேலும் பார்க்க

குஜராத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

குஜராத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட தடைசெய்யப்பட்ட 306 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வழியாக த... மேலும் பார்க்க

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வு: இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

முதலமைச்சா் திறனாய்வுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற இராமகொண்ட அள்ளி அரசுப் பள்ளி மாணவா்களை பாராட்டும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி முதலமைச்சா் திறனாய்வுத் ... மேலும் பார்க்க

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை பெற்றுக்கொள்ள அழைப்பு

பொது விநியோகத் திட்ட பொருள்களை கடத்திய வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அவற்றின் உரிமையாளா்கள் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் தெரிவி... மேலும் பார்க்க