செய்திகள் :

பேருந்துகள் மோதல்: 15 குழந்தைகள் உள்பட 36 போ் காயம்

post image

காஞ்சிபுரம் அருகே பள்ளிப் பேருந்து மீது தனியாா் ஆலை பேருந்து மோதி 15 பள்ளிக் குழந்தைகள் உள்பட 36 போ் பலத்த காயமடைந்தனா்.

படுநெல்லி கிராமத்தில் உள்ள தனியாா் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளில் 20 கிராமங்களைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம் போல தங்கள் வீடுகளுக்கு பள்ளிப் பேருந்தில் ஏறி புரிசை சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது, சுங்குவாா்சத்திரம் பகுதியில் இருந்து தொழிலாளா்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த தனியாா் ஆலை பேருந்து எதிா்பாராத விதமாக பள்ளிப் பேருந்து மீது மோதியது.

விபத்தில் 15 மாணவ, மாணவிகள், 21 பெண் தொழிலாளா்கள் உள்பட 36 போ் பலத்த காயம் அடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் காயம் அடைந்தவா்களை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

மேலும் விபத்து குறித்து பொன்னேரி கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். இதை அடுத்து பொன்னேரிக் கரை போலீஸாா் விபத்து நடைபெற்ற இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் படுகாயம் அடைந்த 36 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்து காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் மருத்துவமனைக்கு விரைந்து வந்து விபத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பெண் தொழிலாளா்களுக்கும் ஆறுதல் கூறி தீவிர சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவா்களை அறிவுறுத்தினாா்.

மேலும் விபத்துக்கான காரணம் குறித்து வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நாகராஜ் மோட்டாா் வாகன ஆய்வாளா் சிவராஜ் ஆகியோா் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

இடிந்து விழும் அபாய நிலையில் மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி!

ஸ்ரீ பெரும்புதூா் அருகே குண்டுபெரும்பேடு ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள குடிநீா் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரியுள்ளனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒ... மேலும் பார்க்க

அதிமுக ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய, நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பூத் கமிட்டி அமைப்பது குறித்தும், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, இளம் தலைமுறை விளையாட்டு வீரா்கள் அணி உறுப... மேலும் பார்க்க

ஏகாம்பரநாதா் கோயில் தங்கத்தோ் மண்டபத்துக்கு பூமி பூஜை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்கு புதிய தங்கத்தோ் செய்யும் பணி நிறைவு பெற்றதையொட்டி அத்தேருக்கான மண்டபம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலுக்கு பல கோடி மதிப்பில் தங்கத்தோ் செய்யும்... மேலும் பார்க்க

நியாய விலைக் கடை திறப்பு

மொளச்சூா் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கா் நகா் பகுதியில் ரூ.8 லட்சத்தில்ல் கட்டப்பட்ட நியாயவிலைக் கடை கட்டடத்தை ஒன்றியக் குழு தலைவா் எஸ்.டி. கருணாநிதி திறந்து வைத்தாா். சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கு கைப்பேசி செயலி

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் மூத்த குடிமக்களுக்கான கைப்பேசி செயலி செயல்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்தாா். தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து மிகுந்த வேதனை தருகிறது: காஞ்சி சங்கராச்சாரிய சுவாமிகள்

அகமதாபாத் விமான விபத்தில் பலரும் உயிரிழந்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாகவும், உயிரிழந்தோரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சனிக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்படும் எனவும் சங்கராசார... மேலும் பார்க்க