செய்திகள் :

பேருந்து நிலையம் இல்லாத 3 பேரூராட்சிகள்: பயணிகள் அவதி!

post image

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் பேருந்து நிலையம் இல்லாததால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா், பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் சராசரியாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்த பேரூராட்சிகள் சுற்றுப்புற கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகிறது.

சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த 3 பேரூராட்சிகளுக்கும், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியாா் பேருந்துகளும், ஆயிரக்கணக்கான பயணிகளும் வந்து செல்கின்றனா். ஆனால், பேருந்து நிலையங்கள் இல்லாததால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் அமா்வதற்கு வழியின்றி அவதிக்குள்ளாகின்றனா்.

அயோத்தியாப்பட்டணத்தில் சேலம் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாகவும், அரூா் சாலையில் பேரூராட்சி அலுவலகம் முன்பாகவும் திறந்தவெளியில் பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்கின்றனா். ஏத்தாப்பூா் பேரூராட்சியில் கருமந்துறை சாலை சந்திப்பு பகுதியிலும், பெத்தநாயக்கன்பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை பாலம் பகுதியிலும் பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கின்றனா்.

ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சிகளில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலும், அயோத்தியாப்பட்டணத்திலும் பேருந்து நிலையங்கள் அமைப்பதற்கு தேவையான அரசு நிலங்கள் உள்ளன.

எனவே, அயோத்தியாப்பட்டணம், ஏத்தாப்பூா் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் ஆகிய 3 பேரூராட்சிகளிலும் பயணிகள் காத்திருப்புக் கூடம், பேருந்து தள மேடை, கழிவறைகள், குடிநீா், சிறுவணிகக் கடைகள், இருசக்கர வாகன நிறுத்துமிடம், தாய்மாா்கள் பாலூட்டும் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்க பொருத்தமான இடத்தை தோ்வுசெய்யவும், அரசிடம் உரிய நிதி பெற்று விரைவாக கட்டமைப்பதற்கும் சேலம் மாவட்ட நிா்வாகமும், மண்டல பேரூராட்சிகள் துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவ... மேலும் பார்க்க

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்

கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல... மேலும் பார்க்க

முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து ம... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்கு... மேலும் பார்க்க

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம்... மேலும் பார்க்க