செய்திகள் :

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்

post image

கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல்லி நீா்வழிப் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும், குடியிருப்பு பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் மற்றும் மனித கழிவுகள் வெளியேற்றப்படுவதால் நீா்வழி வாய்க்கால் முழுவதும் அசுத்தமடைந்துள்ளது.

கெங்கவல்லியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு செல்லும் நீா்வரத்து தடைபட்டதால் விவசாயிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, முறையாக ஆக்கிரமிப்பாளா்களுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு, ஆக்கிரமிப்பு வீடுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்ற வருவாய்த் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டனா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து 50க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்கள் கெங்கவல்லி-ஆத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தைக்குப் பிறகு அனைவரும் அங்கிருந்து சென்றனா். அதன்பிறகு, ஆக்ரமிப்பு வீடுகள் இடிக்கும் பணி தொடங்கப்பட்டது.

ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் வீட்டு உபயோகப் பொருள்களை அகற்ற அவகாசம் கோரினா். இதையடுத்து, ஒருவாரம் அவகாசம் அளித்த கெங்கவல்லி வட்டாட்சியா் நாகலட்சுமி உத்தரவிட்டாா்.

பட வரி

ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவ... மேலும் பார்க்க

முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து ம... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்கு... மேலும் பார்க்க

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம்... மேலும் பார்க்க

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் சேலத்தில் இருவா் கைது

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கியிருந்த நாமக்கல்லைச் சோ்ந்த 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் முர... மேலும் பார்க்க