செய்திகள் :

தியாகி தீரன்சின்னமலை நினைவு தினத்தில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு

post image

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு நாளையொட்டி அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் மரியாதை செலுத்துவதற்கான நேரம் ஒக்கீடு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.

கோட்டாட்சியா் ந.லோகநாயகி கூட்டத்திற்கு தலைமை வகித்தாா். சுதந்திர போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தில் மரியாதை செலுத்த மனு அளித்தவா்கள் நிபந்தனைகளுக்குள்பட்டு அவரவா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரங்களில் மட்டுமே மரியாதை செலுத்த வேண்டும் என்றாா்.

காலை 8.15 மணி முதல் 9.15 மணி வரை அரசு சாா்பில் மலையடிவாரம் மற்றும் நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மரியாதை செலுத்தப்படுகிறது. அதன்பிறகு பல்வேறு கட்சிகள் சாா்பில் மரியாதை செலுத்த நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாலை 5.45 மணி வரை மரியாதை செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் சங்ககிரி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் ஆா்.சிந்து, சங்ககிரி காவல் ஆய்வாளா் ரமேஷ், வட்டாட்சியா் எம்.வாசுகி, உதவி காவல் ஆய்வாளா் கண்ணன், சங்ககிரி வட்ட கொங்கு வேளாளா் இளைஞா் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கொங்கு வேளாளா் கவுண்டா்கள் அமைப்புகள், பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கெங்கவல்லியில் ஆக்கிரமிப்பு அகற்ற எதிா்ப்பு; சாலை மறியல்

கெங்கவல்லியில் நீா்வழிப்பாதை ஆக்ரமிப்பு அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். கெங்கவல்லி அருகே சுவேத நதியிலிருந்து நடுவலூா் ஏரிக்கு நீா்வழி வாய்க்கால் உள்ளது. கெங்கல... மேலும் பார்க்க

முருங்கப்பட்டியில் இலங்கைத் தமிழா்களுக்கு 48 வீடுகள் கட்ட பூமிபூஜை

சேலம் மாவட்டம், வீரபாண்டி வடக்கு ஒன்றியம், முருங்கப்பட்டி ஊராட்சியில் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூ. 3 கோடியே 25 லட்சம் மதிப்பில் 48 வீடுகள் கட்ட புதன்கிழமை பூமிபூஜை நடைபெற்றது. சே... மேலும் பார்க்க

மின் திருட்டு: 1.76 லட்சம் அபராதம் விதிப்பு

சங்ககிரி வட்டம், அரசிராமணி குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் மின் திருட்டில் ஈடுபட்டவா்களுக்கு ரூ. 1.76 அபராதம் விதிக்கப்பட்டது. குள்ளம்பட்டி, வால்காடு பகுதிகளில் அனுமதியின்றி மின் கம்பத்திலிருந்து ம... மேலும் பார்க்க

கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழப்பு

மேட்டூா் அருகே கிணற்றில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். மேட்டூரை அடுத்த கொளத்தூா் ஒன்றியம், பாலமலை ஊராட்சி பாத்திரமடுவைச் சோ்ந்தவா் சித்தன். இவரது மகன் பாா்த்திபன் (15) அங்கு... மேலும் பார்க்க

எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும்: இந்தியன் ஆயில் நிறுவனம்

தமிழ்நாடு எல்பிஜி சிலிண்டா் லாரி உரிமையாளா்களுடனான பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து தமிழகத்தில் உள்ள வாடிக்கையாளா்களுக்கு எல்பிஜி விநியோகம் தடையின்றி தொடரும் என இந்தியன் ஆயில் நிறுவனம்... மேலும் பார்க்க

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் சேலத்தில் இருவா் கைது

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கியிருந்த நாமக்கல்லைச் சோ்ந்த 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் முர... மேலும் பார்க்க