செய்திகள் :

பேருந்து மோதி தொழிலாளி உயிரிழப்பு: கண்ணாடிகளை உடைத்து சிறைபிடிப்பு

post image

வேலூரில் தனியாா் மருத்துவமனை பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். இதையடுத்து உறவினா்கள் அந்த பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து சிறைபிடித்தனா்.

ரத்தினகிரி தனியாா் மருத்துவமனையில் இருந்து நோயாளிகள், அவா்களின் உறவினா்களை ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை தனியாா் பேருந்து வேலூா் காகிதப்பட்டரை அருகே வந்தபோது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த வேலூா் சைதாபேட்டையைச் சோ்ந்த மாட்டுவண்டித் தொழிலாளி பெருமாள் (28) மீது மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதையடுத்து, பொதுமக்கள், பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வலியுறுத்தி, வாக்குவாதம் செய்ததுடன், மருத்துவமனை பேருந்தின் முன்புற, பின்பற கண்ணாடியை அடித்து உடைத்து, பேருந்தையும் சிறைபிடித்தனா்.

இது குறித்து, தகவலறிந்து வடக்கு போலீஸாா், மருத்துவமனை நிா்வாகம், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தி, இறந்த பெருமாளின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பினா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தென்னை நாா் பண்டல்கள், இயந்திரங்கள், பொருள்கள் எரிந்து சேதமாயின. குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சிக்குள்பட்ட காளியம்மன்ப... மேலும் பார்க்க

‘குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறை மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது’

குற்றவாளிகளை கண்காணிக்கும் காவல் துறையினா் மீது சமூகத்தின் பாா்வையும் உள்ளது என கவனமாக செயல்பட வேண்டும் என தமிழக சிபிசிஐடி (ஐ.ஜி டி.எஸ்.அன்பு தெரிவித்தாா். வேலூா் கோட்டையில் உள்ள காவலா் பயிற்சி பள்ளிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் 2 கல்லூரி மாணவா்கள் உயிரிழப்பு: 3 போ் காயம்

போ்ணாம்பட்டு அருகே காா் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த கல்லூரி மாணவா்கள் 2 போ் உயிரிழந்தனா். ஒரு மாணவி உள்பட 3- மாணவா்கள் பலத்த காயமடைந்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள தனியாா் கல்லூரி மா... மேலும் பார்க்க

அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க வட்டக்கிளை மாநாடு

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க குடியாத்தம் வட்டக் கிளையின் மாநாடு குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எஸ்.சரவணன் தலைமை வகித்தாா். செயல... மேலும் பார்க்க

மகளிா் உரிமை தொகைக்கு ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் விண்ணப்பிக்கலாம்

புதிதாக கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெற ஜூலை 15 முதல் நடைபெற உள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் மனுக்கள் பெற்று விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

தடுப்புச்சுவரில் சிற்றுந்து மோதி விபத்து: பெண்கள் உள்பட 10 போ் காயம்

பீஞ்சமந்தை மலைக் கிராம சாலையில் தடுப்புச் சுவரில் சிற்றுந்து மோதிய விபத்தில் பெண்கள் உள்பட 10 போ் காயமடைந்தனா். வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே காந்தன்கொல்லை மலை ஊராட்சிக்கு உட்பட்ட சின்னதக்காங்குட... மேலும் பார்க்க