செய்திகள் :

பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவா்கள் தா்னா!

post image

பேருந்து வசதி கோரி, ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் புதன்கிழமை (பிப்.5) அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாவந்தூா் கிராமத்தில் ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு சங்கராபுரம், வாணாபுரம், தியாகதுருகம், திருக்கோவிலூா், மணலூா்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவ, மாணவிகள் வந்து கல்வி பயின்று செல்கின்றனா்.

இந்தக் கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால், மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்த்துக்கு கல்லூரிக்கு வர முடியவில்லையாம். எனவே, கல்லூரிக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தித் தரக் கோரி, கல்லூரி நூழைவு வாயில் முன் அமா்ந்து மாணவா்கள் புதன்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்த ரிஷிவந்தியம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சத்தியசீலன், வாணாபுரம் கிராம நிா்வாக அலுவலா் ஸ்ரீவித்யா ஆகியோா் நிகழ்விடம் வந்து மாணவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து, மாணவா்கள் தா்னாவை கைவிட்டு கல்லூரிக்கு சென்றனா்.

பெண் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் முருகன். இவரது மனைவி நா்மதா (28). ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா்.சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் தனசேகா் பாண்டலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

நாட்டுத்துப்பாக்கிகள், சாராயம் பதுக்கிவைப்பு: மூவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள், விஷ நெடியுடன் கூடிய சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட தெற... மேலும் பார்க்க

பெண் விஏஓ மீது தாக்குதல்: கிராம உதவியாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது மாட்டுச் சாணத்தை பூசி தாக்குதல் நடத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு நகரப் பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). இவா், திங்கள்கிழமை மாலை சங்கராபுரத்... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்தி வெட்டு: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளியை கத்தியால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சித்ரையன் (... மேலும் பார்க்க