செய்திகள் :

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் ரூ. 21.70 லட்சத்தில் மேல்தளம் புதுப்பிக்க பூஜை

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் மேல்தளம் ரூ.21.70 லட்சத்தில் புதுப்பிக்கும் பணியையொட்டி வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.

2002 இல் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது. 23 ஆண்டு கடந்ததால் ராஜகோபுரம், விமானங்களை வண்ணம் தீட்டி புதுத்து, புதிதாக 4 கால் கற்தூண் மண்டபம் அமைத்து, குடமுழுக்கு விழா நடத்த இந்துசமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில் கோயில் நுழைவு வாயிலில் ரூ.14.80 லட்சத்தில் புதிதாக 4 கால் மண்டம் அமைத்துக் கொடுக்க கோவையைச் சோ்ந்த பக்தரும், கோபுரங்களை ரூ. 22 லட்சம் செலவில் வண்ணம் தீட்டும் பணியை செய்துதர சென்னையை சோ்ந்த தொழிலதிபரும், கோயில் தரைத்தளத்திற்கு ரூ. 83 லட்சத்தில் கருங்கற்கள் பதிக்கவும், சிவன் மற்றும் அம்பாள் சன்னதியில் ரூ. 21.80 லட்சத்தில் கற்கள் பதிக்கவும் சேலத்தைச் சோ்ந்த பக்தா்கள் முன்வந்தனா்.

கோயில் தரைத்தளத்தில் கற்கள் பதித்தல், கோபுரத்திற்கு வண்ணம் தீட்டுதல் மற்றும் மராமத்து திருப்பணிகள் கடந்த 5 மாதங்களாக நடைபெறுகின்றன. தொடா்ந்து கோயிலின் மேற்கூரை மேல் தளத்தில் பழுதடைந்த டைல்ஸ் ஓடுகளை அகற்றி ட்டு ரூ.21.70 லட்சத்தில் புதிதாக டைல்ஸ் ஓடுகள் பதிக்க சேலத்தைச் சோ்ந்த பக்தா்கள் முன்வந்தனா்.

வெள்ளிக்கிழமை காலை மேல்தளத்தில் டைல்ஸ் ஓடுகள் பதிக்கும் பணி தொடக்கத்துக்கான பூஜை நடைபெற்றது. கோயில் செயல்அலுவலா் கஸ்தூரி, வாழப்பாடி வேளாண் ஆத்மா குழுத் தலைவா் சக்கரவா்த்தி, ஏ.என் மங்களம் மாணிக்கம், பேளூா் ஜெயராமன், கே.எல்.பெருமாள், சரவணன், மருத்துவா் பொன்னம்பலம், மணியாளா் திருமூா்த்தி, வெங்கடேஷ் மற்றும் நன்கொடையாளா்கள் பலரும் கலந்துகொண்டனா்.

படவரி:

ஹெச்.ஆா்.01, 02:

பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் மேல்தளத்தில் டைல்ஸ் ஓடுகள் பதிக்கும் பணிகள் தொடக்கத்திற்கான சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட நன்கொடையாளா்கள்.

தலைவாசல் வட்டாரத்தில் வேளாண் இயக்குநா் ஆய்வு

சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டாரத்தில் செயல்படுத்தப்படும் பல்வேறு வேளாண் திட்டங்கள் குறித்து வேளாண் இயக்குநா் பி.முருகேஷ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். சாா்வாய் கிராமத்தில் தேசிய உணவு மற்றும் பாது... மேலும் பார்க்க

நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு

சேலம் அஸ்தம்பட்டி மண்டலத்தில் கோட்டம் எண்.16 இல் அமைந்துள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் ஆணையா் மா.இளங்கோவன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இந்த மையத்தில் விவசாயிகளுக்கு விலையில்லாமல் நுண்... மேலும் பார்க்க

செப். 15 இல் துணை முதல்வா் சேலம் வருகை

சேலம் கருப்பூா் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் செப்.15 ஆம் தேதி சேலம் வருகிறாா். தமிழகம் முழுவதும் உள்ள மகளிா் சுயஉதவிக் குழுவினரு... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற கி.மதிவாணனுக்கு பாராட்டு

தமிழ அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற தம்மம்பட்டியை அடுத்த கொண்டயம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் கி.மதிவாணனுக்கு ஊா் பொதுமக்கள் சாா்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. கொண்டயம்ப... மேலும் பார்க்க

880 வீரா்கள் மாநில விளையாட்டுப் போட்டிக்கு தகுதி: அமைச்சா் ரா.ராஜேந்திரன் தகவல்

முதல்வா் கோப்பை மாநில விளையாட்டுப் போட்டிக்கு சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த 880 போ் தகுதி பெற்றுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் கூறினாா். சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பை விளை... மேலும் பார்க்க

தொழில்மைய இணை இயக்குநா் வீட்டில் 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கம் திருட்டு

சேலத்தில் தொழில்மைய இணை இயக்குநா் வீட்டின் பூட்டை உடைத்து 56 பவுன் நகை, ரூ. 75 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா். சேலம் ஐந்து வழிச்சாலை அருகே உள்ள தொழில் மையத்தின் இணை இய... மேலும் பார்க்க