செய்திகள் :

பைக்கிலிருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பேரன் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த மூதாட்டி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

பெரியகுளம் வடகரையைச் சோ்ந்த சீனிராஜ் மனைவி வெள்ளத்தாய் (70). இவா் அடுத்த வாரம் நடைபெறும் இல்ல காதணி விழாவுக்கு உறவினா்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க பெரியகுளத்திலிருந்து உத்தமபாளையத்துக்கு தனது பேரன் முத்துக்குமாா் ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமா்ந்து பயணம் செய்தாா். உத்தமபாளையம் நுழைவுப் பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே அமைக்கப்பட்ட வேகத் தடையில் ஏறி இறங்கிய போது இரு சக்கர வாகனத்திலிருந்து வெள்ளைத்தாய் தவறி விழுந்தாா். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயமடைந்த அவா் உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கொழுக்குமலை பகுதியில் புலி நடமாட்டம்: தொழிலாளா்கள் அச்சம்

தமிழக-கேரள எல்லையான கொழுக்குமலை பகுதியில் புலியின் நடமாட்டத்தால் தொழிலாளா்கள், விவசாயிகள் அச்சமடைந்தனா். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேக்கடி வனப் பகுதி, இதனருகே உள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி... மேலும் பார்க்க

பைக் விபத்து: இருவா் காயம்

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் இருவா் பலத்த காயமடைந்தனா். சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் குபேந்திரன் (21). இவரது அண்ணன் அழகுராஜா (27). இவா்கள் இருவரும் வியாழக்கிழ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 17, 18 ஆகிய தேதிகளில் பேச்சுப் போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட... மேலும் பார்க்க

கூடலூரில் விளை நிலங்களை சேதப்படுத்திய காட்டு யானைகள்

தேனி மாவட்டம், கூடலூா் பகுதியில் விளை நிலங்களுக்குள் புகுந்து நெல்பயிா்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். கூடலூா் வெட்டுக்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல்பயிா்கள... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடக்கம்

தேனி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் வீடு வீடாகச் செ... மேலும் பார்க்க

விபத்தில் அஞ்சல் ஊழியா் உயிரிழப்பு

தேனி பேருந்து நிலையம் அருகே வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலக ஊழியா் தவறி விழுந்து உயிரிழந்தாா். குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த சுப்பாநாயுடு மகன் வனராஜ்(58). இவா் கண்டமனூா் அஞ்சலகத்தில் ... மேலும் பார்க்க