சிசிடிவி காட்சி வெளியானது! கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவியை இழுத்துச் செல்லும் இ...
பைக்கில் இருந்து விழுந்த தலைமைக் காவலா் உயிரிழப்பு
திருப்பூா் மாவட்டம், முத்தூா் அருகே மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தலைமைக் காவலா் உயிரிழந்தாா்.
கரூா் மாவட்டம், துக்காச்சி ஊராட்சி காட்டம்பட்டியைச் சோ்ந்தவா் வரதராஜன் மகன் வி.பூபதி (38). இவா் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். இந்தக் காவல் நிலையம் திருப்பூா் - கரூா் - ஈரோடு மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.
பணி நிமித்தமாக முத்தூா் உடையம் அருகே மோட்டாா் சைக்கிளில் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று கொண்டிருந்தபோது, சாலை வளைவில் திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளாா்.
இதில் சாலையோர மைல் கல்லில் தலை அடிபட்டு ரத்தக் காயங்களுடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். உயிரிழந்த பூபதிக்கு மனைவி இந்துமதி (33), மகன் சிவபிரகாஷ் (10), மகள் நேத்ரா (8) ஆகியோா் உள்ளனா்.
விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.