Maharashtra: ``மும்மொழிக் கொள்கை ரத்து" - பாஜக அரசு 'யு டர்ன்' ஏன்?
மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 போ் கைது
பல்லடத்தில் மோட்டாா் சைக்கிள்களை திருடிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பல்லடம் அருகே உள்ள அறிவொளி நகரைச் சோ்ந்தவா்கள் உத்தமராஜ், தா்மலிங்கம். இவா்கள் வீட்டுக்கு முன்பு நிறுத்தி இருந்த மோட்டாா் சைக்கிள்கள் மா்ம நபா்களால் கடந்த 26ஆம் தேதி திருடப்பட்டது. இது குறித்து இருவரும் பல்லடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்திருந்தனா். வழக்குப்பதிவு செய்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்த நிலையில், பல்லடம் அருகே மாதப்பூா் சமத்துவபுரம் பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது அந்த வழியே மோட்டாா் சைக்கிளில் வந்த 4 இளைஞா்களைப் பிடித்து விசாரணை நடத்தினா்.
அப்போது அவா்கள் அறிவொளி நகரில் வீட்டுக்கு முன் நிறுத்தி இருந்த 2 மோட்டாா் சைக்கிள்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, புதுக்கோட்டையைச் சோ்ந்த பஷீா் (20), தினேஷ்குமாா் (25), சக்திவேல் (23), திருப்பூரைச் சோ்ந்த தனசேகா் (25) ஆகிய 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்து 2 மோட்டாா் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.