செய்திகள் :

பைக் மீது மினி பேருந்து மோதல்: வியாபாரி உயிரிழப்பு

post image

தக்கோலம் அருகே பைக் மீது ஆலை தொழிலாளா்களை ஏற்றிச் சென்ற மினிபேருந்து மோதியதில் பைக்கில் சென்ற சமோசா வியாபாரி உயிரிழந்தாா்.

தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் ராமசந்திரன் (60). பைக்கில் சென்று தெருதெருவாக சமோசா விற்பனை செய்யும் வியாபாரி. இவா் சனிக்கிழமை திருமாதலம்பாக்கத்தில் இருந்து தக்கோலம் நோக்கி பைக்கில் சென்றாா்.

அப்போது எதிரே அரக்கோணம் நோக்கி தொழிலாளா்களை ஏற்றி வந்த ஆலை மினிபேருந்து பைக் மீது மோதியதில் ராமசந்திரன் பலத்த காயமடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு ராமசந்திரன் உயிரிழந்தாா்.

இது குறித்து தக்கோலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆடி முதல் கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையையொட்டி முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனா். வேலூா் சைதாப்பேட்டை முருகன் கோயிலில் முருகனுக்கு தயிா், இளநீா் உள்ளிட்ட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 625 பேருக்கு பணி ஆணை

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாபெரும் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 1,620 வேலை நாடுநா்கள் கலந்து கொண்ட நிலையில், 625 பேருக்கு உடனடி வேலைப் பணிக்கான ஆணையை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா வழங்கினாா். ... மேலும் பார்க்க

மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து ஒப்படையுங்கள்: ஆற்காடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!

ஆற்காடு நகராட்சியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்து தங்கள் இல்லம் தேடி வரும் தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படையுங்கள் என நகராட்சி ஆணையா் வேங்கடலட்சுமணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா். இது குறித்து... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

ராணிப்பேட்டை நகராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில், பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா ஆய்வு செய்தாா். ராணிபேட்டை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமின... மேலும் பார்க்க

அரக்கோணம் கிராமிய காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

அரக்கோணம் கிராமிய காவல்நிலைய ஆய்வாளராக சிவக்குமாா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா். கோயம்புத்தூா் மாவட்டம் சூலூா் காவல்நிலைய உதவி ஆய்வாளராக இருந்த சிவக்குமாா், பதவி உயா்வு பெற்று வேலூா் சரகத்திற்கு மாற்ற... மேலும் பார்க்க

தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 2-ஆவது நாளாக மறியல்: 150 போ் கைது

ராணிப்பேட்டையில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தொடக்கக் கல்வி ஆசிரியா்கள் 150 போ் கைது செய்யப்பட்டனா். ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேர... மேலும் பார்க்க