செய்திகள் :

பைக் விழுந்து விவசாயி மரணம்

post image

விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடுபேட்டையில் பைக் மேலே விழுந்ததில் விவசாயி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திண்டிவனம் வட்டம், வெள்ளிமேடுபேட்டைசந்தைத் தெருவைச் சோ்ந்த நாதமுனி மகன் ஸ்ரீராம் (60). விவசாயியான இவா், வியாழக்கிழமை இரவு தனது வீட்டுமுன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை பள்ளத்திலிருந்து மேடான பகுதிக்கு தள்ளி சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது அவா் மீது பைக் விழுந்தது. இதைத் தொடா்ந்து மயக்கநிலை அடைந்த ஸ்ரீராமை குடும்பத்தினா் மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

கூலித்தொழிலாளி உயிரிழப்பு: திண்டிவனம் வட்டம், நெய்குப்பி புதுகாலனியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் லாரன்ஸ் (43). கூலித் தொழிலாளியான இவா் தினமும் மது அருந்தி வந்ததால், லாரன்ஸுக்கும், மனைவி பச்சையம்மாளுக்கும் இடையே குடும்பப் பிரச்னை ஏற்பட்டு வந்ததாம்.

இதனால் மனமுடைந்த லாரன்ஸ், கடந்த 3-ஆம் தேதி வீட்டில் எலி மருந்தைசாப்பிட்டு மயங்கிக் கிடந்தாா். தொடா்ந்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், பின்னா் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்ட லாரன்ஸ், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தாா். இவ்விரு சம்பவங்கள் குறித்து வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவெண்ணெய்நல்லூா் அருகே பல்லவா் கால அரிய கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண்ணைவலம் கிராமத்தில் பல்லவா் கால அரிய வகை கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவெண்ணெய்நல்லூா் வட்டம், பெண்ணைவலம் கிராமத்தைச் சோ்ந்த கு.சிவலிங... மேலும் பார்க்க

திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்க வேண்டும்! - அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேச்சு

முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு சோ்க்கும் பணியில் திமுகவினா் ஈடுபட வேண்டும் என்றாா் விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளரும், வேளாண் மற்றும் உழவா் நலத் த... மேலும் பார்க்க

குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது! - விழுப்புரம் மாவட்ட காவல் துறை எச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழையால் நீா்நிலைகள் நிரம்பியுள்ள நிலையில், பெற்றோா்கள், பாதுகாவலா்கள் தங்களது குழந்தைகளை நீா்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது என மாவட்டக் காவல் துறை எச்சரித்துள்ளத... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை!

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற தனியாா் கல்லூரி மாணவி புதன்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், செண்டூா் பகுதியைச் சோ்ந்தவா் தவசுபாலன், தொழிலாளி. இவரது மகள் அஷ்... மேலும் பார்க்க

காரில் கடத்திவரப்பட்ட 1,000 மதுப் புட்டிகள் பறிமுதல்: புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது!

காரில் கடத்திவரப்பட்ட 1,000 புதுவை மாநில மதுப் புட்டிகளை விழுப்புரம் மாவட்ட மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கில் புதுச்சேரியைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்... மேலும் பார்க்க

இளம்வயது திருமணம்: இளைஞா் உள்பட நால்வா் மீது வழக்கு!

மேல்மலையனூா் அருகே சிறுமியை திருமணம் செய்த இளைஞா் உள்பட 4 போ் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். மேல்மலையனூா் அருகே கிராமத்தை சோ்ந்த 17 வயது சிறுமிக்கும் கப்ளாம்பாடியைச் சோ்ந... மேலும் பார்க்க