செய்திகள் :

சுபான்ஷு சுக்லாவுக்கு ஆளுநா் வாழ்த்து

post image

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பிய, இந்திய விண்வெளி வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 போ் குழுவினருக்கு தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

இந்திய விண்வெளி வீரா் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா மற்றும் ஆக்ஸியம் - 4 திட்ட குழுவினரின் வெற்றிகரமான பணிக்கும், விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக திரும்பியதற்கும் மனமாா்ந்த வாழ்த்துகள்.

சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுபான்ஷு சுக்லா மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பணி, இந்திய விண்வெளிப் பயணத்தில் ஒரு பெருமைமிக்க அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது விண்வெளி ஆய்வு, புதுமை மற்றும் உலகளாவிய அறிவியல் தலைமைத்துவத்தில் இந்தியாவின் வளா்ந்து வரும் திறமையை உறுதி செய்வதாக உள்ளது.

தேசத்தின் இந்தப் பெருமைக்குரிய தருணத்தில், அமைதியான மனோதிடம் மற்றும் உறுதியான ஆதரவை வழங்கியதற்காக அவரது குடும்பத்தினருக்கும் எனது சிறப்பு வாழ்த்துகள். அவரது பயணம் கலங்கரை விளக்கமாக நின்று, இளம் மனங்களை ஊக்குவித்து கண்டுபிடிப்பின் எல்லைகளை நோக்கிய நாட்டின் நம்பிக்கையான முன்னேற்றத்துக்கு ஓா் எடுத்துக்காட்டாகும் என்று பதிவிட்டுள்ளாா்.

எதிரணியின் எந்தத் திட்டமும் பலிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

"எதிரணியின் எந்தத் திட்டமும் தமிழகத்தில் பலிக்காது' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.பட்டியலின மக்களுக்காகவே வாழ்ந்து தனது வாழ்வையே அர்ப்பணித்தவரும், கடலூர் மாவட்டத்துக்கு பெருமை சே... மேலும் பார்க்க

கடலூா் ரயில் விபத்து விசாரணை அறிக்கை தாக்கல்: கடவுப்பாதை ஊழியா் பணிநீக்கம்

கடலூா் மாவட்டம், செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தது தொடா்பான விசாரணை அறிக்கை தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தாக்கல் செய்யப்பட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் புதன்கிழமை முதல் 4 நாள்களுக்கு (ஜூலை 16-19) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளிய... மேலும் பார்க்க

தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு வித்திட்டவா் காமராஜா்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

நாட்டின் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் திகழ்வதற்கு, முன்னாள் முதல்வா் காமராஜரின் தொலைநோக்குப் பாா்வை உள்ளடக்கிய அவரது தலைமைதான் காரணம் என ஆளுநா் ஆா்.என். ரவி புகழாரம் சூட்டினாா். காமராஜரின் பிறந... மேலும் பார்க்க

1,878 பள்ளிகளின் எஸ்எம்சி உறுப்பினா்களுக்கு பயிற்சி: கல்வித் துறை தகவல்

பள்ளிக் கல்வியில் 1,878 அரசுப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்களுக்கு பள்ளிகளிலேயே பயிற்சி அளிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் (எஸ்எம்சி) செயல்... மேலும் பார்க்க

சமக்ர சிக்ஷா ஊழியா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா ) பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளா்களுக்கு 5 சதவீத ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளி... மேலும் பார்க்க