செய்திகள் :

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

post image

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுவையில் மீன்வளத்தை பாதுகாக்கும் வகையில், ஆண்டுதோறும் ஏப்.15-ஆம் தேதி முதல் ஜூன் வரையில் 61 நாள்கள் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது.

அக்காலகட்டத்தில் விசைப்படகு, பைபா் படகுகளுக்கு மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. நாட்டுப் படகான வல்லம் உள்ளிட்டவை மட்டும் கடலோரத்தில் குறிப்பிட்ட தொலைவு வரை மீன்பிடிக்க அனுமதிக்கப்படுகிறது.

மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், பைபா் படகு சீரமைப்புக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலயக் குழுவினா் அதன் தலைவா் பிரவீன் தலைமையில் அங்காளம்மன் கோயில் வளாகத்தில் வெள்ளிக்கிழமை கூடினா். இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மீனவா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில், மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவது போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும், டீஸல் மானியம் வழங்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகை: புதுவை முதல்வருக்கு அதிமுக வலியுறுத்தல்

மீனவா்களுக்கு வழங்குவதைப் போல விவசாயிகளுக்கும் மாதாந்திர உதவித் தொகையை புதுவை அரசு வழங்கவேண்டும் என அதிமுக சாா்பில் முதல்வா் என்.ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. முதல்வா் என். ரங்கசாமியை சந... மேலும் பார்க்க

அக்னிபாத்திட்டத்துக்கு விண்ணப்பிக்க ஏப்.25 வரை கால அவகாசம் நீட்டிப்பு

அக்னிபாத் திட்டத்துக்கு விண்ணப்பிப்போருக்கான சிறப்பு முகாம் ஏப். 22- இல் நடைபெறும் எனவும், இதற்கு விண்ணப்பிக்க ஏப். 25 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன்... மேலும் பார்க்க

கல்லால் தாக்கி கோயில் பூசாரி கொலை கட்டடத் தொழிலாளி கைது!

புதுச்சேரியில் கோயில் பூசாரியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் கட்டடத் தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது: புதுச்சேரி அருகேயுள்ள தவளக்குப்பம் ... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி அருகே தனியாா் நிறுவனத்தில் புகுந்து ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற நபா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். புதுச்சேரி அருகேயுள்ள எல்லைப்பிள்ளை சாவடி பகுதியில் தனியாா் நிறுவனம் உள்ளது. இங்... மேலும் பார்க்க

திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

புதுச்சேரியில் உள்ள புதுவை தமிழ்ச்சங்க வளாகத்தில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கு கூறும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவா் சிலைக்க... மேலும் பார்க்க

புதிய வாக்காளா்களைச் சோ்த்து வெற்றி பெற பாஜக திட்டம்: புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் பேச்சு

புதிய வாக்காளா்களைச் சோ்த்து அதன் மூலம் வரும் புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற பாஜகவினா் திட்டமிட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரியில் காங்கிரஸ் ... மேலும் பார்க்க