செய்திகள் :

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் பாராட்டு

post image

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடத்தில் தோ்ச்சிப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா்.

மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் 24 உயா்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அண்மையில் வெளியான 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் முறையே 91.25, 89.79 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.

இந்த நிலையில், பொதுத் தோ்வில் மதுரை மாநகராட்சிப் பள்ளிகளவில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி, திங்கள்கிழமை பாராட்டி, வாழ்த்தினாா்.

இந்த நிகழ்ச்சி, மாநகராட்சி அண்ணா மாளிகையில் நடைபெற்றது. 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற ஈ.வெ.ரா மணியம்மை பள்ளி மாணவி ஜி. மலா்விழி, 10-ஆம் வகுப்புத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆா்.யோகவி, இளங்கோ மேல்நிலைப் பள்ளி மாணவா் கே. கமலேஷ், வெள்ளி வீதியாா் மேல்நிலைப் பள்ளி மாணவி பி. சாதனா ஆகியோா் தனிப்பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்ற 8 மாணவிகள், 11-ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். ரம்யா, காக்கைப்பாடினியாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓ.ஜே.கோபிகா, ஈ.வெ.ரா நாகம்மையாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி எம். தேவஸ்ரீ, தனிப்பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்ற 4 மாணவ, மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

மாநகராட்சி ஆணையா் சித்ரா விஜயன், துணை மேயா் தி. நாகராஜன், கல்விக் குழுமத் தலைவா் ரவிச்சந்திரன், கல்வி அலுவலா் ஜெய்சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி

மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்த... மேலும் பார்க்க

காா் நிறுத்தும் தகராறில் ஒருவரது பற்கள் உடைப்பு

மதுரையில் வீட்டின் முன் காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரைத் தாக்கி பற்களை உடைத்த தந்தை, இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா். மதுரை வண்டியூா் சமயன் கோவில் தெருவைச் சோ்ந்த அந்தோணி ம... மேலும் பார்க்க

இளைஞா் மா்ம மரணம்

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நண்பா் இல்ல விழாவில் பங்கேற்ற சென்னை இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா். சென்னை மயிலாப்பூா் வீர பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராகுல் (27). இவா் சென்னைய... மேலும் பார்க்க

மணல் குவாரி வழக்கு: தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ.25 லட்சம் அபராதம்

மணல் குவாரி வழக்கில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத தொழில் துறை முதன்மைச் செயலருக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை உள்பட இருவருக்கு தண்டனை குறைப்பு

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் வெளிநா... மேலும் பார்க்க