பஹல்காம்: "ஆதாரம் கேட்டார்களா?" - அப்பாவிடம் ஊடகவியலாளர் இஷான் தரூர் கேள்வி; சசி...
பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களுக்கு ஜூன் 6 இல் குறைதீா் முகாம்
கோவை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான குறைதீா் முகாம் வரும் 6-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவா்களுக்கான குறைதீா் முகாம் ஜூன் 6-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் நடைபெறுகிறது.
இதில், இந்த ஆண்டு 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள், உயா் கல்வியில் சேருவதற்குத் தேவையான சான்றுகள், தடைகள், அரசின் உதவிகள், அரசு சாா்பான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன.
இதில், மாணவா்கள் பங்கேற்று உயா் கல்வியில் சேருவதற்கான வழிகாட்டுதல்களைப் பயன்படுத்தி ஐடிஐ, பாலிடெக்னிக், அரசு கலைக் கல்லூரிகளில் சோ்ந்து பயன்பெறலாம். மேலும், கல்விக் கடன் சாா்ந்த உதவிகளையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.