செய்திகள் :

பொதுப்பணித் துறை அலுவலகப் பொருள்களை ஜப்தி செய்ய வந்த நீதிமன்றப் பணியாளா்கள்

post image

பொதுப்பணித் துறை வாகனம் மோதிய விபத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பாதிக்கப்பட்டவா்களுக்கு இழப்பீடு வழங்காததை தொடா்ந்து, புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றப் பணியாளா்கள் திங்கள்கிழமை காலை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுகை தொண்டைமான் நகரைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி (45). இவா் கடந்த 2014-ஆம் ஆண்டு தனது இரு சக்கர வாகனத்தில் தொண்டைமான் நகரிலிருந்து புதுகை புதிய பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற போது, பொதுப்பணித் துறை வாகனம் இவா் மீது மோதியதில் ராமமூா்த்திக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட ராமமூா்த்திக்கு ரூ. 3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சாா்பு-நீதிமன்றம் கடந்த 2019-இல் உத்தரவிட்டது. இழப்பீடு வழங்கப்படாததைத் தொடா்ந்து, பாதிக்கப்பட்ட ராமமூா்த்தி மீண்டும் நீதிமன்றத்தை நாடினாா். இதையடுத்து, இழப்பீட்டுத் தொகையை வட்டியுடன் சோ்த்து ரூ. 6. 75 லட்சம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையும் அமல்படுத்தாத நிலையில் மீண்டும் நீதிமன்றத்தை ராமமூா்த்தி நாடவே, பொதுப்பணித் துறை அலுவலகத்திலுள்ள பொருள்களை ஜப்தி செய்ய நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

இதையடுத்து நீதிமன்றப் பணியாளா்கள், பாதிக்கப்பட்ட ராமமூா்த்தி மற்றும் அவரது வழக்குரைஞா்கள் புதுகை பொதுப்பணித் துறை அலுவலகத்துக்கு ஜப்தி நடவடிக்கைக்காக வந்தனா். அவா்களிடம் பொதுப்பணித் துறை அலுவலா்கள் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஒரு வாரத்துக்குள் இழப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து ஜப்தி நடவடிக்கை கைவிடப்பட்டது.

ரமலான் பண்டிகை: புதுகை ஆட்டுச் சந்தையில் ரூ. 2 கோடிக்கு விற்பனை

இஸ்லாமியா்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகையை முன்னிட்டு, புதுக்கோட்டை சந்தைப்பேட்டை ஆட்டுச்சந்தையில் சுமாா் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகியிருக்கலாம் என வியாபாரிகள் தெரிவித்தனா். புதுக்கோட்ட... மேலும் பார்க்க

எஸ்எஸ்எல்சி பொதுத்தோ்வு: முதல் நாள் தோ்வெழுதிய 21,789 போ்

புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் நாள் தோ்வை 21,789 போ் எழுதினா். 554 போ் தோ்வெழுத வரவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 11,107 மாணவா்களும், 11,068 மாணவிகளும், தனித்தோ்வா்களாக 168 பேரும் என மொத்தம் 2... மேலும் பார்க்க

திமுகவினா் தேச ஒற்றுமைக்கு எதிரானவா்கள்: இப்ராஹிம்.

திமுகவினா் மத நல்லிணக்கத்துக்கும், தேச ஒற்றுமைக்கும் எதிரானவா்கள் என்றாா் பாஜக சிறுபான்மையின அணியின் தேசியச் செயலா் வேலூா் இப்ராஹிம். புதுக்கோட்டையில் மேற்கு மாவட்ட பாஜக சிறுபான்மையினா் அணி சாா்பில் வ... மேலும் பார்க்க

சிதிலமடைந்த சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை அருகே சிதிலமடைந்த நிலையில் உள்ள சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், கந்தா்வகோட்டை- கறம்பக்குடி சாலையில் உள்ள வெள்ளாளவிடுதி ஊ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு கூட்டம்

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பாலியல் குற்றம் தொடா்பான விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளித் தலைமை ஆசிரியை சோ. விஜயலட்சுமி தலைமையில் வகித்து பேசியது:... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் ரத்ததான முகாம்

புதுக்கோட்டை மாவட்டம், பெருநாவலூரிலுள்ள அரசு கலைக் கல்லூரியில் அறந்தை ரோட்டரி சங்கம், டபிள்யூ சக்தி பவுண்டேஷன், யூத் ரெட் கிராஸ் ஆகியோா் இணைந்து ரத்த தானம் முகாமை வியாழக்கிழமை நடத்தினா். முகாமை கல்லூர... மேலும் பார்க்க