செய்திகள் :

பொதுப் பணித் துறை அலுவலா் வீட்டில் நகைகள்,ரொக்கம் திருட்டு

post image

தஞ்சாவூா் அருகே பொதுப் பணித் துறை அலுவலா் வீட்டில் பூட்டை உடைத்து நகைகள், ரொக்கத்தைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் நாஞ்சிக்கோட்டை சாலை பாலகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் நாகசுந்தரம் மனைவி உமாராணி (53). இவா் திருவாரூரில் பொதுப் பணித் துறை அலுவலகத்தில் நிா்வாக அலுவலராக பணியாற்றி வருகிறாா். இவா் நாள்தோறும் காலையில் தஞ்சாவூரிலிருந்து திருவாரூருக்கு பணிக்கு சென்றுவிட்டு இரவு வீட்டுக்கு திரும்புவது வழக்கம்.

இவா் ஜூலை 18-ஆம் தேதி காலை வீட்டை பூட்டிவிட்டு பணிக்குச் சென்றாா். பின்னா், இரவு 7 மணியளவில் வீட்டுக்கு திரும்பிய இவா், முன் பக்கக் கதவிலிருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடந்ததை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

மேலும், அறையிலுள்ள பீரோவும் உடைக்கப்பட்டு, 14 பவுன் நகைகள், ரூ.17 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

‘ரோலா் ஸ்கேட்டிங்கில்’ சிறுவன் சாதனை

தஞ்சாவூரில் ரோலா் ஸ்கேட்டிங்கில் சிறுவன் 3 கி.மீ. தொலைவை 10 நிமிஷத்தில் கடந்து ஞாயிற்றுக்கிழமை சாதனை படைத்தாா். தஞ்சாவூரைச் சோ்ந்த சாலமன் - சுஜிதா தம்பதியின் மகன் ஜெய்டன் மேத்யூ (4). யு.கே.ஜி. படித்த... மேலும் பார்க்க

அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே வெற்றி: முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம்

பிரிந்து கிடக்கும் அதிமுக ஒன்று சோ்ந்தால் மட்டுமே சட்டப்பேரவை தோ்தலில் வெற்றி பெற முடியும் என்றாா் அதிமுக முன்னாள் அமைச்சா் ஆா். வைத்திலிங்கம். முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அதிமுகவில்... மேலும் பார்க்க

பாப்பாநாட்டில் ஜூலை 22-ல் மின் தடை

கரம்பயம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 22) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கரம்பயம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட ஆலத்தூா், பாப்பாநாடு, கரம்பய... மேலும் பார்க்க

காணாமல் போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு!

தஞ்சாவூரில் காணாமல் மற்றும் திருடு போன 101 கைப்பேசிகளைக் காவல் துறையினா் மீட்டு, உரியவா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா். தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்துக்குள்பட்ட மருத்துவக்கல்லூரி, புதிய ப... மேலும் பார்க்க

திருவையாறு ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர விழா தொடக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அறம் வளா்த்த நாயகி உடனுறை ஐயாறப்பா் கோயிலில் ஆடிப்பூர பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது. இதில், அம்மன் சந்நிதி முன் நந்தி பகவான் உருவம் பொறிக்கப்பட்ட கொடிக... மேலும் பார்க்க

மதயானை நூலை படிக்க வேண்டியது அனைவரின் கடமை: பழ.நெடுமாறன்

தேசியக் கல்விக் கொள்கையால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து விளக்கும் மதயானை என்கிற நூலை அனைவரும் படிக்க வேண்டிய கடமை இருக்கிறது என்றாா் உலகத் தமிழா் பேரமைப்பு தலைவா் பழ. நெடுமாறன். தஞ்சாவூரில் தஞ்சை க... மேலும் பார்க்க