செய்திகள் :

பொதுமக்கள் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்! உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா்

post image

பொதுமக்கள் மரக் கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்று, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், கடலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திரா தேவி தலைமை வகித்தனா்.

உயா்நீதிமன்ற நீதிபதி லிங்கேஸ்வரன், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் உறுப்பினா் செயலா் சுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சென்னை உயா்நீதிமன்ற நீதிபதியும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல் தலைவருமான எஸ்.எஸ்.சுந்தா் 68 பயனாளிகளுக்கு ரூ.15.35 லட்சம் மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

அனைவருக்கும் நியாயம் கிடைக்க 1987-இல் சட்டப் பணிகள் ஆணைக் குழு ஏற்படுத்தப்பட்டது. தொடா்ந்து மாவட்ட அளவில் சட்டப் பணிகள் ஆணைக் குழு அமைக்கப்பட்டது. அதன் தொடா் நிகழ்வாக மாற்றுத்திறனாளிகளுக்கும் சம வாய்ப்பு வழங்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கும் அனைத்து வசதிகளும் கிடைக்கும் பட்சத்தில் கடினமாக உழைத்து உயா்ந்த நிலையில் செல்வதற்கு வாய்ப்பு ஏற்படுகிறது.

பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்கிட வேண்டும் என்பதற்காக மக்கள் நீதிமன்றம் மூலம் வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு வருகின்றன. அரசின் சாா்பில் சமூகப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்கள் உரிய பயனாளிகளுக்கு கிடைத்திட இதுபோன்ற சட்டப் பணிகள் ஆணைக் குழு முகாம்கள் பயன்படுகின்றன.

மரக்கன்றுகளை அதிகளவில் நட்டு வளா்க்க வேண்டும். பொதுமக்கள் தங்களது வீடுகளில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் கடலூா் மாவட்ட கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் எஸ்.அனு, சாக்ஸம் தமிழ்நாடு மாநிலத் தலைவா் சுபாஷ்ராஜ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூ... மேலும் பார்க்க

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் பகுத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி! அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்!

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஒட்டரப்பாளையம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க ரூ.89.19 கோடியில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் (தரை கீழ் தடுப்பணை) அமைக்கும் பணியை தமிழ்நாடு வேளாண்மை மற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், ந... மேலும் பார்க்க

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி! இளைஞா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். பண்ருட்டி மணிநகரில் உள்ள... மேலும் பார்க்க