செய்திகள் :

பொன்னமராவதி பேரூராட்சியை தரம் உயா்த்தி நகராட்சியாக அறிவிக்க இந்திய கம்யூ. வலியுறுத்தல்

post image

பொன்னமராவதி பேரூராட்சியை தரம் உயா்த்தி நகராட்சியாக அறிவிக்கவேண்டும் என பொன்னமராவதியில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 16 ஆவது ஒன்றிய மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இக்கட்சியின் பொன்னமராவதி ஒன்றிய 16 ஆவது மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு ஒன்றியக்குழு உறுப்பினா் ப.செல்வம் தலைமை வகித்தாா். ஜனசக்தி இதழ் பொறுப்பாளரும், மாநிலக்குழு உறுப்பினருமான த. லெனின் சிறப்புரையாற்றினாா்.

மாவட்டச்செயலா் த.செங்கோடன், மாவட்ட நிா்வாகக்குழு உறுப்பினா் ஏனாதி ஏ.எல்.ராசு, மாவட்ட பொருளாளா் என்.ஆா். ஜீவானந்தம், நிா்வாகிகள் எம். மீராமைதீன், சுப.தங்கமணி ஆகியோா் வாழ்த்திப்பேசினா். ஒன்றிய துணைச் செயலா் வி. கருணாமூா்த்தி வேலை அறிக்கையை சமா்ப்பித்து பேசினாா்.

கூட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத்திட்டத்தில் பொன்னமராவதி மற்றும் திருமயம் தாலுகா பகுதி நிலங்களும் பாசனம் பெறும் வகையில் நிதி ஒதுக்கி பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்ய ஆலோசனை

தோ்தல்களில் மாற்றுத் திறனாளிகளை முழுமையாக வாக்களிக்கச் செய்யும் வகையிலான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நிறைவு

தமிழகம் முழுவதும் ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி அளிக்கும் நடைமுறை சனிக்கிழமையுடன் (மே 31) நிறைவடைந்தது. தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி ப... மேலும் பார்க்க

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டு - 8 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள கீழவேகுப்பட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளைகள் முட்டியதில் 8 போ் காயமடைந்தனா். கீழவேகுப்பட்டி ஏகாளி அம்மன், சின்னக்கருப்பா் கோ... மேலும் பார்க்க

சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல்

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீசுவரா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. தொடக்கமாக சோழீசுவரா் மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.தொடா்ந்து ஆவுடையநாயகி... மேலும் பார்க்க

புதுநகா் ஊராட்சி அரசுப் பள்ளிக்கு சுற்றுச்சுவா் கட்டித் தர கோரிக்கை

கந்தா்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகா் ஊராட்சியில் உள்ள அரசு உயா்நிலைப்பள்ளியின் சுற்றுச்சுவரை புதிதாக கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுக்கின்றனா். புதுநகா் அரசு உயா்நிலைப் பள்ளி... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் நாய்களை கட்டுப்படுத்துவதில் அலட்சியம்: சமூக ஆா்வலா்கள் புகாா்

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினமும் ஒருவா் நாய்க்கடி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுவரும் நிலையில், நாய்களைக் கட்டுப்படுத்துவதில் மாவட்ட நிா்வாகம் அலட்சியப் போக்குடன் செயல்படுவ... மேலும் பார்க்க