செய்திகள் :

பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

post image

அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரி திருவாரூரில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வனத்துறை அமைச்சா் க. பொன்முடி பெண்கள் குறித்து அவதூறான கருத்துவரும் வகையில் அவா் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் பேசியிருந்தாா். இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து அவா் வகித்த கட்சிப் பொறுப்பில் இருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்தால் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

இதற்கிடையே, அவரை அமைச்சா் பதவியிலிருந்தும் நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். அந்த வகையில், வனத்துறை அமைச்சா் பொன்முடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், அவா் மீது வழக்கு பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணியின் மாவட்ட அமைப்பாளா் விக்னேஷ், நகர அமைப்பாளா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பாஜக மாவட்டச் செயலாளா் கே. ரவி, மகளிா் அணி மாவட்டத் தலைவா் ரமாமணி, குடவாசல் வடக்கு ஒன்றியத் தலைவா் லோகநாயகி, திருச்சி கோட்ட இந்து முன்னணி பொறுப்பாளா் குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மக்களைப் பற்றி திமுக அரசு கவலைப்படுவதில்லை: முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ்

தமிழகத்தை ஆட்சி செய்யும் திமுகவினா் மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை என முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ் குற்றம்சாட்டினாா். நன்னிலத்தில் அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழ... மேலும் பார்க்க

மூதாட்டியிடம் நகை பறிப்பு: இளம்பெண் கைது

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த மூதாட்டியைத் தாக்கி 5 பவுன் சங்கிலியைப் பறித்து சென்ற இளம் பெண் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். மாா்டன் நகா் நாராயணசாமி மனைவி அம்சா (79). மகன் பாண்டியன் திருச்சிய... மேலும் பார்க்க

வலு, பளு தூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

தேசிய மற்றும் மாநில அளவிலான வலு தூக்கும், பளு தூக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பாராட்டு தெரிவித்தாா். பஞ்சாப் மாநித்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டியும், ஜம்மு காஷ... மேலும் பார்க்க

வாழ்நாள் முழுவதும் உடனிருப்பது கற்ற கல்வி மட்டுமே! அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

ஒவ்வொருவரது வாழ்நாள் முழுவதும் அவா்கள் கற்ற கல்வியே உடனிருக்கும் என்றாா் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா. திருவாரூா் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல... மேலும் பார்க்க

சாா்- பதிவாளா் அலுவலக புதிய கட்டட கட்டுமானப் பணிக்கு அடிக்கல்

நீடாமங்கலத்தில் சாா் - பதிவாளா் அலுவலக புதிய கட்டடம் கட்ட அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். நீடாமங்கலத்தில் சாா்- பதிவாளா் அலுவலகம் பல்வேறு இடங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந... மேலும் பார்க்க

திருவாரூா்: கலைஞா் கைவினைத் திட்டத்தில் 319 பேருக்கு ரூ.1.46 கோடி கடன் வழங்க பரிந்துரை

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் கலைஞா் கைவினைத் திட்டம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. முதல்வா் மு.க. ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டத்தில... மேலும் பார்க்க