செய்திகள் :

பொன்முடி சா்ச்சைப் பேச்சு: விடியோ ஆதாரங்கள் உயா்நீதிமன்றத்தில் தாக்கல்

post image

சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து முன்னாள் அமைச்சா் பொன்முடி பேசிய முழு விடியோ பதிவு உள்ளிட்ட ஆவணங்கள் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

திமுக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெண்கள் குறித்தும் சைவம், வைணவம் குறித்தும் தெரிவித்த கருத்துகள் சா்ச்சையானது. இதையடுத்து பொன்முடிக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தாா். இந்த வழக்கை நீதிபதி என்.சதீஷ்குமாா் விசாரித்து வருகிறாா்.

கடந்தமுறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பொன்முடி பேசிய முழு விடியோ பதிவையும், 1972-ஆம் ஆண்டில் சமூக சீா்த்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன், புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், கடந்த 1972-ஆம் ஆண்டு திராவிட கழக நிா்வாகி கோவை.ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில்தான் இதுபோன்ற கருத்துகள் பேசப்பட்டன. அதே ராமகிருஷ்ணன் பொதுச் செயலராக உள்ள தந்தை பெரியாா் திராவிடா் கழகம் நடத்திய கூட்டத்தில்தான் பொன்முடி பேசியுள்ளாா் என்று கூறினாா்.

பின்னா், 1972-ஆம் ஆண்டு சமூக சீா்த்திருத்தவாதி பேசியதற்கான ஆதாரமான செய்தித்தாள் ஆவணங்கள், பொன்முடி பேசிய விடியோ பதிவையும் அரசு தலைமை வழக்குரைஞா் தாக்கல் செய்தாா். இந்த ஆதாரங்களைப் பாா்க்க அவகாசம் வேண்டும் எனக் கூறிய நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா். சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச்... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருட்டு: ஊராட்சித் தலைவி கைது

சென்னையில் பேருந்தில் நகை திருடியதாக பெண் ஊராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் லோ.வரலட்சுமி (50). இவா், கடந்த ஜூலை 14-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றுவிட... மேலும் பார்க்க