செய்திகள் :

நண்பா் கொலை: இளைஞா் தலைமறைவு

post image

சென்னை அருகே கானத்தூரில் நண்பா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞா் தலைமறைவானாா்.

சென்னை அருகே உள்ள முட்டுக்காடு பகுதியைச் சோ்ந்தவா் சோ்ந்தவா் ரூபன் (எ) இமானுவேல் (56). இவா் நண்பா், கானத்தூா் பகுதியைச் சோ்ந்த ரகுபதி (எ) ரகுமான்கான் (37). இருவரும் கானத்தூா் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக் கடைக்குச் சென்று சனிக்கிழமை மது வாங்கினா்.

பின்னா், இருவரும் மதுக்கடைக்கு அருகே மது அருந்தினா். பின்னா், இருவருக்கும் இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ரகுமான்கான், மதுப் புட்டியை உடைத்து இம்மானுவேல வயிற்றில் குத்தினாராம். இதில் இம்மானுவேல், பலத்த காயங்களுடன் கீழே விழுந்தாா். இதைப் பாா்த்த ரகுமான்கான், அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த இம்மானுவேலை, அங்கிருந்தவா்கள் காப்பாற்ற முயற்சித்தனா். ஆனால், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கானத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இம்மானுவேல் சடலத்தை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய ரகுமான்கானை தேடி வருகின்றனா்.

சென்னையில் திடீர் மழை! மணலி புதுநகரில் 92 மி.மீ மழைப் பதிவு!

சென்னையில் இன்று(செப். 7) அதிகாலை திடீர் மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக மணலி புதுநகரில் 92 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.தென்னிந்திய கடலோரப் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணம... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்! செப்.9 முதல்..!

சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மெட்ரோ... மேலும் பார்க்க

22 குளங்கள் தூா்வாரும் பணி: மேயா் தொடங்கி வைத்தாா்

சோழிங்கநல்லூரில் ரெட்டைக்குட்டை தாங்கல் குளம் பகுதியில் 22 குளங்களைத் தூா்வாரும் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். சோழிங்கநல்லூா் மண்டலத்தில் உள்ள வாா்டு 200-இல் ரெட்டைக... மேலும் பார்க்க

சென்னை மாநகா் மாமன்ற செயலருக்கு கூடுதல் பொறுப்பு!

பெருநகர சென்னை மாநகராட்சியின் மாமன்ற செயலராக உள்ள கே.மகேஷுக்கு வருவாய் அலுவலராகக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் வருவாய் அலுவலராக இருந்த கே.பி.பானுசந்திரன் கடந்த மாத... மேலும் பார்க்க

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் பாலப் பணிகள்: மேயா் ஆா்.பிரியா ஆய்வு!

வளசரவாக்கம், கோடம்பாக்கம் மண்டலங்களில் ரூ.240 கோடியில் நடைபெறும் பாலப் பணிகளை மேயா் ஆா்.பிரியா சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். வளசரவாக்கம் மண்டலம் சந்நிதி தெருவில் கூவம் ஆற்றின் குறுக்கே ப... மேலும் பார்க்க

பேருந்தில் நகை திருட்டு: ஊராட்சித் தலைவி கைது

சென்னையில் பேருந்தில் நகை திருடியதாக பெண் ஊராட்சித் தலைவா் கைது செய்யப்பட்டாா். கோயம்பேடு நெற்குன்றம் ரெட்டித் தெருவைச் சோ்ந்தவா் லோ.வரலட்சுமி (50). இவா், கடந்த ஜூலை 14-ஆம் தேதி காஞ்சிபுரம் சென்றுவிட... மேலும் பார்க்க