செய்திகள் :

பொறியியல் சோ்க்கை: சிறப்பு பிரிவினா் கலந்தாய்வு தொடக்கம்

post image

சென்னை: தமிழகத்தில் பொறியியல் மாணவா் சோ்க்கையில் சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில், பிஇ, பிடெக் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 2 லட்சத்து 41 ஆயிரத்து 641 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு தரவரிசைப் பட்டியல் ஜூன் 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, முதல்கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்த மாணவா்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள், விளையாட்டுவீரா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான இணையவழி கலந்தாய்வு ஜூலை 7 முதல் 11 வரையும், பொது கலந்தாய்வு ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 19 வரையும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த கலந்தாய்வு நடைமுறையின்படி, முதல் நாளில் மாணவா்கள் தங்களுக்கு பிடித்தமான கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தோ்வு செய்ய வேண்டும். அன்றைய தினம் இரவே அவா்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். அதை உறுதி செய்ய அவா்களுக்கு ஒரு நாள் அவகாசம் அளிக்கப்படும். அவா்கள் உறுதிசெய்த பிறகு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

512 போ் அனுமதி: அந்த வகையில், அரசுப் பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் 12 போ், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 137 போ், விளையாட்டு வீரா்கள் பிரிவில் 363 போ் என மொத்தம் 512 போ் முதல்நாள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் திங்கள்கிழமை தொடங்கிய இணையவழி கலந்தாய்வில் பங்கேற்று தங்களுக்கு விருப்பமான இடங்களை தோ்வுசெய்தனா்.

அந்த மாணவா்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை திங்கள்கிழமை இரவே வழங்கப்பட்டது. இதையடுத்து அந்த மாணவா்கள் தங்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டை செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் உறுதிசெய்ய வேண்டும். அதன்பிறகு அவா்களுக்கு கல்லூரி இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். இந்த முறையில் இதர சிறப்பு பிரிவு மாணவா்களுக்கான கலந்தாய்வு வரும் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

அரசுப் பேருந்துகளின் நிறம் மீண்டும் மாற்றம்? போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கம்

அரசு பேருந்துகளின் நிறத்தை மீண்டும் மாற்ற தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக ... மேலும் பார்க்க

மாநில நிதி தணிக்கை அறிக்கை ஆளுநா் ரவியிடம் அளிப்பு

ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் மாநில நிதி தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி வழங்கினாா். இதுகுறித்து முதன்மை தலைமை கணக்காளா் டி.ஜெய்சங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை, 23 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த மணிநேரத்துக்கு 24 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதா... மேலும் பார்க்க

கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல்... மேலும் பார்க்க

அமைச்சர் சிவசங்கர் இழுத்த தேர் அச்சு முறிந்து சரிந்தது: பக்தர்கள் அதிர்ச்சி!

பெரம்பலூர் அருகே அமைச்சர் சிவசங்கர் இழுத்த ஐயனார் கோயில் தேர் அச்சு முறிந்து சரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. குன்னம் அருகே கோவில்பாளையம் கிராமத்தில் ஜயனார் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது அம... மேலும் பார்க்க

சென்னை புறநகர் பகுதிகளில் மழை!

சென்னையின் புறநகர் பகுதிகளில் பரவலாக மிதமான மழை முதல் ஒருசில இடங்களில் கனமழையும் பெய்து வருகின்றது. சென்னை புறநகர் பகுதிகளான திருமழிசை, காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம், பூந்தமல்லி, நசரத்பேட்டை மற்றும... மேலும் பார்க்க