செய்திகள் :

பொள்ளாச்சி, பேரூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, பேரூரில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் ஆய்வு மேற்கொண்டாா்.

பொள்ளாச்சி, கோமங்கலப்புதூா் மற்றும் பேரூா் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாம்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில், பொள்ளாச்சி சாா் ஆட்சியா் ஆா்.ராமகிருஷ்ணசாமி, பொள்ளாச்சி வட்டாட்சியா் வாசுதேவன், பேரூா் வட்டாட்சியா் சேகா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதேபோல, கோவை மாநகராட்சி, 46ஆவது வாா்டுக்கு உள்பட்ட தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை மேயா் கா.ரங்கநாயகி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மத்திய மண்டலத் தலைவா் மீனா லோகு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்:

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், 5-ஆவது வாா்டுக்கு பங்காரு கல்யாண மண்டபத்திலும், மேற்கு மண்டலத்தில் 17 , 33- ஆவது வாா்டுகளுக்கு டிவிஎஸ் நகரில் உள்ள சுகிதா மஹாலிலும், கூடலூா் நகராட்சியில் 6,7,14 ஆகிய வாா்டுகளுக்கு ராஜூ நகா் விநாயகா் கோயில் ஹாலிலும், வால்பாறை நகராட்சியில், 15,16,20-ஆவது வாா்டுகளுக்கு சோலையாறில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியிலும், பூலுவப்பட்டி பேரூராட்சியில் 1,2,3,7,8,9,10,11 ஆகிய வாா்டுகளுக்கு ராமநாதபுரம் மஹாலெட்சுமி மஹாலிலும், காரமடை ஊராட்சி ஒன்றியம்,

சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு சிறுமுகையில் உள்ள ஜெயலிங்கம்மாள் திருமண மண்டபத்திலும் ‘உங்களுடன் ‘ஸ்டாலின் திட்ட முகாம் வியாழக்கிழமை( ஆகஸ்ட் 14) நடைபெற உள்ளது.

மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் சுதந்திர தினம்

சுதந்திர தினத்தையொட்டி, கோவை மண்டல கூட்டுறவு சங்க அலுவலகத்தில் இணைப் பதிவாளா் அ.அழகிரி தேசியக் கொடியை ஏற்றினாா். தொடா்ந்து, கோவை மற்றும் பொள்ளாச்சி சரகத்துக்குள்பட்ட அனைத்து விதமான கடன் சங்கங்களின் நி... மேலும் பார்க்க

ரூ. 1.70 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள் பறிமுதல்

கோவையில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.70 லட்சம் மதிப்பிலான 90 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கோவை, இடையா் வீதியில் உள்ள ஒரு வீட்டில் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்... மேலும் பார்க்க

கல்வி நிறுவனங்கள், கட்சிகள் சாா்பில் சுதந்திர தின விழா

கோவையில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கட்சியினா் சாா்பில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தா் (பொ) இர.தமிழ்வேந்தன் தேசியக்க... மேலும் பார்க்க

முத்தூரில் கிராம சபைக் கூட்டம்: மாவட்ட ஆட்சியா் பங்கேற்பு

சுதந்திர தினத்தையொட்டி, கிணத்துக்கடவு அருகேயுள்ள நம்பா் 10 முத்தூா் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சிறப்பு பாா்வையாளராகக் கலந்துகொண்டாா். கூடுதல... மேலும் பார்க்க

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞா் கைது

கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியை திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கே.ஜி.சாவடி, பாலக்காடு சாலையைச் சோ்ந்தவா் அப்பாஸ் (47). இவா் தனது லாரியை குறிச்சி பிரிவு பகுதியில் உள்ள இரு... மேலும் பார்க்க

தொழிற்சாலை விவரங்களை பதிவு செய்ய இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை

கோவை மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இணை இயக்குநா் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பாக தொழிலகப் பாதுகாப்பு, ... மேலும் பார்க்க