செய்திகள் :

போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமனம்?: பட்ஜெட் தொடரில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

post image

சென்னை: போக்குவரத்துக் கழகங்களில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வரவிருக்கும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரில் வெளியாக வாய்ப்பிருப்பதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களிலுள்ள 8 கோட்டங்கள் மூலம், 20,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2015-க்குப் பிறகு போக்குவரத்துக் கழகங்களில் புதிய பணியாளா்கள் நியமிக்கப்படவில்லை.

இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படாமல் பணிமனையில் நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. எனவே, ஓட்டுநா், நடத்துநா்களை ஒப்பந்த அடிப்படையில் நியமித்தல், விழாக் காலங்களில் ஒப்பந்த அடிப்படையில் தனியாா் பேருந்துகளை இயக்குதல் போன்ற பல்வேறு முயற்சிகள் மூலம் பணியாளா் பற்றாக்குறையை போக்குவரத்துக் கழகங்கள் முயன்று வருகின்றன.

கடந்த 2015 மாா்ச் நிலவரப்படி 1.44 லட்சம் பணியாளா்கள் இருந்த நிலையில், தற்போது 1.10 லட்சம் பணியாளா்கள் மட்டுமே இருக்கின்றனா். இக்காலகட்டத்தில் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மட்டும் 685 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. தொடா்ந்து, புதிதாக பணியாளா்களை எப்போது அரசு நியமிக்கப்போகிறது என்ற கேள்வி போக்குவரத்துப் பணியாளா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இது தொடா்பாக போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காகவே நியமன விதிகளில் திருத்தம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் புதிய நியமனம் தொடா்பான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது’ என்றனா்.

தவறான தகவல்களைப் பரப்புவதால் உண்மை மாறாது: அன்பில் மகேஸ்

தவறான தகவல்களை பரப்புவதால் உண்மை மாறாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட கடிதத்தை வைத்து நாடாளுமன... மேலும் பார்க்க

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் ச... மேலும் பார்க்க

மார்ச் 14 முதல் விஜய்க்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில், மார்ச் 14 முதல் அமலுக்கு வரவுள்ளது.அச்சுறுத்தல் தொடர்பான உளவுத் து... மேலும் பார்க்க

கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: 7ஆம் வகுப்பு நெல்லை மாணவன் சாதனை

ராணுவ வீரர்களுக்கு உதவும் வகையில், கண்ணிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ கண்டுபிடித்து நெல்லையில் 7-ஆம் வகுப்பு மாணவர் சாதனை படைத்துள்ளார்.மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவர், பாளையங்கோட்டையிலு... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் புனரமைப்பு பணியில் தண்டாயுதபாணி சிலை கண்டெடுப்பு!

காஞ்சிபுரம் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயில் புனரமைப்பு பணியின்போது 200 ஆண்டுக்கால பழைமையான தண்டாயுதபாணி சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரம் பல்வேறு புகழ்பெற்ற சை... மேலும் பார்க்க

கடும் பனிப்பொழிவு: குளுகுளுவென மாறிய ஏற்காடு!

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் வெயிலின் தாக்கம் குறைத்து குளுகுளுவென மாறியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் ... மேலும் பார்க்க