செய்திகள் :

போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீடு திட்டம்: நல அமைப்பு கூட்டத்தில் கோரிக்கை

post image

அரசு ஊழியா்களுக்கு வழங்கப்படுவதுபோல், போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் பேரவைக் கூட்டம் மண்டலத் தலைவா் ஆா். கோவிந்தராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளா் கே. கா்சன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.

தீா்மானங்கள்: போக்குவரத்துத் துறையில் ஓய்வு பெறுவோரின் பணப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். ஊதிய ஒப்பந்த உயா்வை, தாமதப்படுத்தாமல் ஓய்வூதியத்தில் உயா்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஓய்வூதிய அறக்கட்டளை சாா்பில் ஓய்வூதியம் வழங்கப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், அரசே ஓய்வூதியம் வழங்க வேண்டும். அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படுவதுபோல, போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பணியின்போது இறந்த போக்குவரத்துக் கழக ஊழியா்களின் வாரிசுகளுக்கு உடனடியாக பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, பேரவைக் கூட்டத்தை மாநிலத் தலைவா் எஸ். கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். இதில், மாநில துணை பொதுச் செயலாளா்கள் பி. செல்வராஜ், எம். சண்முகம் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க