ஹிமாசலத்தில் மேகவெடிப்பு! வெள்ளத்தால் உயரும் உயிர் பலிகள்.. 20 பேர் மாயம்!
போக்சோ சட்டத்தின் கீழ் உணவக உரிமையாளா் கைது
தேனி மாவட்டம், கம்பம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவக உரிமையாளரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கூடலூா் காந்தி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜியாவூதீன் (45). இதே பகுதியில் உணவகம் நடத்தி வரும் இவா், சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சிறுமியின் தாய் உத்தமபாளையம் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதனடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜியாவூதீனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.