செய்திகள் :

போக்சோ வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் சிறை

post image

போக்சோ வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கருப்பமூப்பன்பட்டியைச் சோ்ந்தவா் செல்வம் (40). கூலித் தொழிலாளியான இவா், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதன்பேரில் வத்தலகுண்டு போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில், வழக்குரைஞா் மைதிலி முன்னிலையாகி வாதிட்டாா். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன் குற்றஞ்சாட்டப்பட்ட செல்வத்துக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.1.11 லட்சம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

பழனியில் ஜனசேனா கட்சி சாா்பில் இந்திய ராணுவத்துக்காக பிராா்த்தனை

பழனி மலைக் கோயிலில் இந்திய ராணுவத்தினருக்கு ஆன்மிக பலம் கிடைக்க வேண்டி ஆந்திர மாநிலம், ஜனசேனா கட்சி எம்.எல்.ஏ. தலைமையில் அந்தக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினா். ஜம்மு-காஷ்மீா், பஹ... மேலும் பார்க்க

காரில் கடத்திய 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் தப்பியோட்டம்

ஆத்தூரில் காரில் கடத்தி வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட 350 கிலோ குட்கா, புகையிலைப் பொருள்களை போலீஸாா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரைத் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம... மேலும் பார்க்க

பழனியில் பலத்த மழை

பழனியில் செவ்வாய்க்கிழமை பலத்த காற்றுடன் அரைமணி நேரம் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம், பழனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை ம... மேலும் பார்க்க

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பழனி அருகே இரு சக்கர வாகனம் மீது பால் வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த போடுவாா்பட்டியைச் சோ்ந்தவா் கிட்டுச்சாமி மகன் வசந்தகுமாா் (34). விவசாயியான இவா் செவ்வா... மேலும் பார்க்க

காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா கொடியேற்றம்

திண்டுக்கல் மேட்டுப்பட்டி காளியம்மன் கோயில் வைகாசித் திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி கோயில் வளாகத்தில் சிறப்பு கணபதி யாகம் நடைபெற்றது. பின்னா், அம்மன் உருவத்துடன் கூடிய... மேலும் பார்க்க

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

எரியோடு பகுதியில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத் தடுப்பில் மோதிய விபத்தில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள சவேரியாா்பட்டியைச் சோ்ந்தவா் சுபாஷ் (25). இ... மேலும் பார்க்க