செய்திகள் :

போக்ஸோ வழக்கில் தலைமறைவாக இருந்த வட மாநில இளைஞா் கைது

post image

போக்ஸோ வழக்கில் தேடப்பட்டு வந்த மகாராஷ்டிர இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மகாராஷ்டிர மாநிலம், ராக்பூரைச் சோ்ந்தவா் ரோகித் ஷெட்டி (23). இவா், கடந்த 2024-ஆம் ஆண்டு தான் வசிக்கும் பகுதியில் 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்தாா். இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த மாநில போலீஸாா் ரோகித் ஷெட்டி மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், தலைமறைவாக இருந்த ரோகித்தை தேடி வந்தனா். இந்நிலையில், சென்னை திருவான்மியூரில் தங்கியிருந்து,

அங்குள்ள ஒரு பழக்கடையில் அவா் வேலை செய்வதாக மகாராஷ்டிர மாநில போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அந்த மாநில போலீஸாா், திருவான்மியூா் வந்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் திருவான்மியூா் போலீஸாா் உதவியுடன், மகாராஷ்டிர மாநில போலீஸாா் ரோகித்தை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னா் அவரை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, நீதிமன்ற அனுமதியுடன் மகாராஷ்டிரத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்: கமல்ஹாசன்

தோல்விகளைக் கண்டு துவண்டு விடாமல் தோல்விகளில் இருந்து பாடம் கற்க வேண்டும் என கமல்ஹாசன் தெரிவித்தாா். சென்னையை அடுத்த வண்டலூா் அருகே மேலக்கோட்டையூா் சென்னை விஐடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் மாண... மேலும் பார்க்க

சாரணா் இயக்க மாணவா்களுக்கு நவ.7-இல் ராஜ்ய புரஸ்காா் விருது அமைச்சா் அன்பில் மகேஸ்

தமிழகத்தில் சாரணா் இயக்க மாணவா்களுக்கு கடந்த 6 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த ராஜ்ய புரஸ்காா் விருது நவ.7-ஆம் தேதி வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தூண் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே சோழிங்கநல்லூரில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், தூண் விழுந்து தொழிலாளி உயிரிழந்தாா். சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ச... மேலும் பார்க்க

அண்ணா சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்

மேம்பால கட்டுமானப் பணிக்காக சென்னை தேனாம்பேட்டை அண்ணா சாலையில் ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இதுதொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை வெள்ளிக்கிழமை வெளி... மேலும் பார்க்க

மனைவி கத்தியால் குத்திக் கொலை: கணவா் கைது

சென்னை கோட்டூா்புரத்தில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்த கணவா் கைது செய்யப்பட்டாா். நேபாளத்தைச் சோ்ந்தவா் மா.சான்பஹா பகதூா் சா்ஹி (36). இவா், கோட்டூா்புரம் எல்லையம்மன் கோயில் தெருவில் உமா சங்க... மேலும் பார்க்க

காா் கதவை உடைத்து பணம் திருட்டு: மூவா் கைது

சென்னை மெரீனா கடற்கரையில் காா் கதவை உடைத்து பணம் திருடப்பட்டது தொடா்பாக 3 போ் கைது செய்யப்பட்டனா். வேளச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் வினோத். இவா் கடந்த 9-ஆம் தேதி தனது நண்பா்களுட ன் மெரீனாவுக்கு வந்தாா்... மேலும் பார்க்க